மெட்ரோ ரெயில் பணி: ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

226 0

திருப்போரூர்:

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45 கி.மீட்டர் தூரத்துக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீட்டர் தூரத்துக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மெட்ரோ பணிகள்... சென்னையில் இந்த ஏரியாக்களில் 6 மாதம் போக்குவரத்து மாற்றம்  | Indian Express Tamil

தற்போது மெட்ரோ ரெயில் பணிக்காக ராட்சத எந்திரம் மூலம் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் முதல் பெருங்குடி வரை ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவே பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் தொடர்ந்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை கந்தன் சாவடி முதல் கண்ணகி நகர் வரை சுமார் 5 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் அவ்வழியே வந்த தனியார் நிறுவன பஸ்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றன.

இதனால் வேலைக்கு செல்வோர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோரும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கண்ணகி நகர் துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி முழுவதும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

5 கி.மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஒரு மணிநேரம் வரை ஆனது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘மெட்ரோ ரெயில் பணியால் ஓ.எம்.ஆர். சாலையில் தினந்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்வதே கடினமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Post

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு – தவெக மாநாட்டில் விஜய் போட்ட அரசியல் அணுகுண்டு

Posted by - October 28, 2024 0
தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என விஜய் தெரிவித்தார். தமிழக…

தயிரை சூடு பண்ணி சாப்பிடலாமா? ஆயுர்வேதத்தின் படி அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Posted by - December 7, 2023 0
தயிர் இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத இடத்தைக் கொண்டுள்ளது, எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் அது தயிர் இல்லாமல் முழுமையடையாது. இந்திய உணவுகளில் பலவேறு வழிகளில் தயிர்…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

Posted by - March 23, 2026 0
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, 9 காவலர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான…

வீட்டிற்கு வராத கதிர் ஆனந்த்.. லாக்கரை உடைக்க கடப்பாறை; வேலூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

Posted by - January 4, 2025 0
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக…

சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

Posted by - April 11, 2023 0
சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன்  உறுப்பினர் எவரேனும் மொழியலாம் தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *