ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா? ஃபைனலில் நுழைந்த பாக்., – ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறை..

216 0

ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.

ஃபைனலில் நுழைந்த பாகிஸ்தான்

ஆசியக் கோப்பை போட்டிகள் பரபரப்பான இறுதிக்கட்டட்தை எட்டியுள்ளன. அதன்படி, நேற்று நடைபெற்ற வாழ்வா? சாவா போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்ப, 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆனாலும், பந்துவீச்சில் மிரட்ட, வங்கதேச அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி

முன்னதாக  சூப்பர் 4 சுற்றில் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதைதொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நடப்பு ஆசியக் கோப்பையில் ஏற்கனவே லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்று என இரண்டு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போட்டிகள் நடைபெற்றன. அந்த இரண்டிலுமே இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மீண்டும் மூன்றாவது முறையாக இரு அணிகளும் மோதும் சூழல் உருவாகியுள்ளது. அதோடு, ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டி வரும் 28ம் தேதி அன்று, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது.

ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து, சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தி மீண்டும் வெற்றி பெற்று அசத்தியது. இந்நிலையில் தான், இறுதிப்போட்டியிலும் வென்று, நடப்பு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியா – இலங்கை இன்று மோதல்

இதனிடையே, இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றதால், இலங்கை அணி ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. இது ஒரு சம்பிரதாய போட்டியாகவே நடைபெறுகிறது. நடப்பு ஆசியக் கோப்பையில் இதுவரை தோல்வியையே கண்டிராத ஒரே அணியான இந்தியா, அந்த பயணத்தை அப்படியே இறுதிப்போட்டிக்கும் தொடர இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும். அதேநேரம், ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய இலங்கை அணியும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறது.

Related Post

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா….Sorry சர்பராஸ் கான்

Posted by - February 16, 2024 0
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், பட்டிதார் ஆகியோர் சொற்ப ரன்களில்…

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்!

Posted by - April 9, 2025 0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்…

IPL 2023 : வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

Posted by - April 18, 2023 0
டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர்…

IPL2024-வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த சி.எஸ்.கே. – 6 விக். வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வென்றது

Posted by - March 23, 2024 0
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள…

ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

Posted by - May 20, 2023 0
சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் ப்ளே-ஆப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *