’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!

200 0

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது என்பதை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அறிவார்கள் என்றும், எங்களுக்கு என்ன இடர்பாடு என்பதை அறிந்த அவர்கள் அதனை சரிசெய்தால் மீண்டும் NDA கூட்டணிக்கு செல்வது குறித்து பரிசீலனை செய்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதோடு, கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், எங்கள் தொண்டர்களின் கருத்தால் மட்டுமே வெளியேறியதாகவும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

எதற்கும் அடிபணியமாட்டேன்

தான் எதற்கும் எந்த அழுத்தத்திற்கும் அடி பணிய மாட்டேன் என்றும் அந்த தைரியம் ஜெயலலிதாவிடமிருந்து தனக்கு வந்ததாகவும் கூறியுள்ள டிடிவி தினகரன், விரைவில் கூட்டணியை அறிவிப்போம் என்றும் நாங்கள் பங்குபெறும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையவேண்டும் என்பதுதான் முதல் விருப்பம் என்றும் அதற்கு அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

நயினார் சரியில்லை ; அண்ணாமலை பெஸ்ட்

அதுமட்டுமின்றி, ஒபிஎஸ்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவத்தனமானது என்றும் அவர் கூட்டணி கட்சிகளை கையாளும் விதம் சரியில்லை என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை மாநில தலைவராக இருந்தவரை கூட்டணியை அவர் சரியாக கையாண்டார் என்றும் நயினாருக்கு அண்ணாமலை மாதிரி செயல்பட தெரியவில்லை என்றும் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Post

டெல்லி செல்வது எதற்காக.? நாளை முக்கிய அறிவிப்பு உண்டா.? செங்கோட்டையன் பதில் இதுதான்

Posted by - September 8, 2025 0
டெல்லி பயணத்திற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது பயணம் குறித்தும் நாளை முக்கிய அறிவிப்பு உள்ளதா என்பதற்கும் என்ன…

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்

Posted by - December 11, 2025 0
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, வரும் 14-ம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில்,…

அடித்துக் கொள்ளும் ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள்.. மாம்பழ சின்னத்துக்கே சிக்கல் வந்துடுமோ?

Posted by - September 12, 2025 0
அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்

Posted by - January 7, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியை உறுதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *