’’அமித் ஷாவுடன் சந்திப்பு; கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தேனா? தும்மினால்கூட..’’ ஈபிஎஸ் பரபர!

143 0

சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி.

நாம் தும்மினாலும் இருமினாலும் விவாதம் ஆக்குகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

’’டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வெளிப்படையாகவே சந்தித்தேன். அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு வாகனத்தில்தான் சென்றேன்.

பசும்பொன் முத்துராம லிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என வலியுறுத்தவே அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தேன். அப்போது அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

கர்ச்சீப் கொண்டு துடைத்தேன்; மறைக்கவில்லை

சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள். நாம் தும்மினாலும் இருமினாலும் விவாதம் ஆக்குகிறார்கள்.

எதிர்க் கட்சியாக இருந்தபோது சட்டையைக் கிழித்துக்கொண்டவருக்கு என்னைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.

பாஜக தலையீடு இல்லை

டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்தபடி, அதிமுகவுக்குள் நுழைந்தார். ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், இப்போது என்னைப் பற்றிப் பேசி அரசியல் செய்கிறார்.

அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையீடு இல்லை. எங்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Post

வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக!

Posted by - April 11, 2026 0
சென்னையில் வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கி  இருந்தும் தவெக இந்த பிரசாரங்களை ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் சட்டமன்றத்…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Posted by - March 11, 2026 0
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி…

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

Posted by - October 8, 2025 0
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா…

அடித்துக் கொள்ளும் ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள்.. மாம்பழ சின்னத்துக்கே சிக்கல் வந்துடுமோ?

Posted by - September 12, 2025 0
அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *