’’அமித் ஷாவுடன் சந்திப்பு; கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தேனா? தும்மினால்கூட..’’ ஈபிஎஸ் பரபர!

188 0

சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி.

நாம் தும்மினாலும் இருமினாலும் விவாதம் ஆக்குகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

’’டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வெளிப்படையாகவே சந்தித்தேன். அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு வாகனத்தில்தான் சென்றேன்.

பசும்பொன் முத்துராம லிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என வலியுறுத்தவே அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தேன். அப்போது அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

கர்ச்சீப் கொண்டு துடைத்தேன்; மறைக்கவில்லை

சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள். நாம் தும்மினாலும் இருமினாலும் விவாதம் ஆக்குகிறார்கள்.

எதிர்க் கட்சியாக இருந்தபோது சட்டையைக் கிழித்துக்கொண்டவருக்கு என்னைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.

பாஜக தலையீடு இல்லை

டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்தபடி, அதிமுகவுக்குள் நுழைந்தார். ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், இப்போது என்னைப் பற்றிப் பேசி அரசியல் செய்கிறார்.

அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையீடு இல்லை. எங்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Post

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - July 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…
dmdk 2 e1776320866955

“பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

Posted by - April 16, 2026 0
மு.க.ஸ்டாலின் ஆட்சி மீது போதைக் கலாச்சாரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுதான் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியது திமுக-வினரை அதிருப்தி அடையவைத்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான…
Generated Image November 20 2025 6 37PM

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…
Gemini Generated Image 80ljk280ljk280lj

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

Posted by - April 11, 2026 0
திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி…
Generated Image November 13 2025 10 09AM

“பழம் நமக்குத்தான்” – அன்புமணி உற்சாகப் பேச்சு

Posted by - November 13, 2025 0
“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *