Gemini Generated Image q70qvaq70qvaq70q

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர் கைது..

148 0

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு சங்​கரை சென்னை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கர் மீது ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் 2 மோசடி வழக்​கு​களைப் பதிவுசெய்து கடந்த டிச.13 அன்று கைது செய்​தனர். அவருக்கு உடல்​நலப் பிரச்​சினை​கள் இருப்​ப​தால் ஜாமீனில் விடுவிக்​கக்​கோரி அவரது தாயார் கமலா தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்​கி​யிருந்​தது.

மார்ச் 25-க்​குப் பிறகு நீதி​மன்​றத்​தில் சரணடைய வேண்​டிய சவுக்கு சங்​கர் தலைமறை​வா​னார். இந்​நிலை​யில் சவுக்கு சங்​கர் தன் மீதான 2 வழக்​கு​களை​யும் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார் முன்​பாக நேற்று முன்​தினம் நடந்​தது.

அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், சவுக்கு சங்​கர் தொடர்ந்து தலைமறை​வாக இருந்து வரு​வ​தால் அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து சென்னை போலீ​ஸார் தேடி வரு​வ​தாக தெரி​வித்​தார். மேலும் சிபிஐ விசா​ரணை கோரும் 2 வழக்​கு​களி​லும் ஏற்​கெனவே விசா​ரணை முடிக்​கப்​பட்டு குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டு​விட்​ட​தாக​வும் தெரி​வித்​தார். அதைப்​ப​திவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசா​ரணையை வரும் ஏப்​.27-க்கு தள்​ளி​வைத்து உத்​தர​விட்​டுள்​ளார்.இது ஒரு​புறம் இருக்க தலைமறை​வான சவுக்கு சங்​கரை தனிப்​படை அமைத்து சென்னை போலீ​ஸார் தேடி வந்​தனர். இந்​நிலை​யில், அவர் ஆந்​திர மாநிலத்​தில் உள்ள லாட்ஜ் ஒன்​றில் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, நேற்று அங்கு விரைந்த சென்னை போலீ​ஸார் சவுக்கு சங்​கரை கைது செய்​தனர். அவருடன் தங்​கி​யிருந்த அவரது தோழி மால​தி​யும் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் இரு​வரை​யும் போலீ​ஸார் சென்னை அழைத்து வந்​தனர். மாலதி மீதும் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Related Post

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Posted by - August 26, 2025 0
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - August 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…

“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ – டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு

Posted by - July 23, 2025 0
டெல்டா மாவட்டங்கள் இனி திமுகவின் கோட்டை அல்ல, அந்த கோட்டை எல்லாம் தூள் தூளாக நொறுக்கப்பட்டுவிட்டதாக தஞ்சையில் பேசிய எடப்பாடி பழனிசாமி விமர்சனம். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - February 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *