“இந்தியா செய்யுறத பார்த்தாலே எரிச்சலாகுது” – ஒட்டுமொத்தமாக கடுப்பில் குதித்த அமெரிக்கா

112 0

இந்தியாவின் செயல்பாட்டால் அவர்களுடனான உறவில் எரிச்சல் ஏற்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

USA On INDIA: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

”எரிச்சலூட்டும் இந்தியா”

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதோடு, ரஷ்யாவிடம் இருந்து ராணுவ ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை வாங்குவதற்காக கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தான், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, “ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருளை வாங்குவது அமெரிக்கா உடனான உறவில் ஒரு எரிச்சலான புள்ளியாக இருப்பதாக”பேசியுள்ளார்.

ட்ரம்ப் வருத்தமா?

மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் இந்தியா எரிபொருளை வாங்குவது ட்ரம்பை வருத்தமடைய செய்துள்ளதா? என்ற கேள்விக்கு ”சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ஒரு நட்பு நாடு. எங்களின் கூட்டாளியும் கூட. அதேநேரம் வெளியுறவுக் கொள்கையில் எல்லா விஷயங்களிலும் அனைத்து நேரத்திலும் இருநாடுகளும் 100 சதவிகிதம் ஒத்துப்போவதில்லை” என மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார்.

”ரஷ்யாவிற்கு உதவும் இந்தியா”

தொடர்ந்து பேசுகையில், “இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன, அதில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு மற்றும் ஒவ்வொரு நாட்டையும் போலவே அதன் பொருளாதாரத்தை ஆற்றுவதற்குத் தேவையான பொருட்களை வாங்கும் திறன் அடங்கும். அதன்படி, ரஷ்யாவிடமிருந்து இருந்து வாங்குகிறது. உலக நாடுகளால் விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகள் காரணமாக, மலிவு விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் இண்ட நடவடிக்கை துரதிர்ஷ்டவசமாக, உக்ரைன் உடனான ரஷ்ய போர் முயற்சியைத் தக்கவைக்க உதவுகிறது.  இது இந்தியாவுடனான எங்கள் உறவில் நிச்சயமாக எரிச்சலூட்டும் ஒரு புள்ளியாகும். அதேநேரம்,  எரிச்சலூட்டும் ஒரே புள்ளியும் அல்ல” என்று ரூபியோ தெரிவித்துள்ளார்.

”போரை ஊக்குவிக்கும் இந்தியா”

தொடர்ந்து பேசுகையில், “அதிபர் ட்ரம்ப் வெளிப்படுத்துவது மிகவும் தெளிவான விரக்தியாகும். சந்தையில் பல எண்ணெய் விற்பனையாளர்கள் இருந்தாலுமே, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்கிறது. இது ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு நிதியளிக்க உதவுகிறது மற்றும் உக்ரைனில் இந்தப் போர் தொடர அனுமதிக்கிறது” என்று ரூபியோ குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் வர்த்தக நண்பன் அமெரிக்கா:

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது. 2024-25 நிதியாணிடில் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக்ம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இந்த வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இருநாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.  அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி மொபைல் போன்கள், மருந்துகள், ஜவுளி மற்றும் ரத்தினக் கற்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கி 87 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளன. இந்நிலையில் இந்திய பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிக்கும் ட்ரம்பின் முடிவு, உள்நாட்டு ஏற்றுமதி திறனை கடுமையாக பாதிக்கும் என கருதப்படுகிறது.

Related Post

உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா

Posted by - May 27, 2025 0
எதுவுமே தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற சொல்வார்கள். அதுபோல, பாகிஸ்தானில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை வந்த உடன் தான், அமைதிப் பேச்சுவார்த்தை வேண்டும் என்று…

சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்

Posted by - August 30, 2023 0
பெய்ஜிங்: காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள்…

தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…

Posted by - July 8, 2023 0
அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர்…

ஆங்கிலப் புத்தாண்டு: முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

Posted by - December 31, 2023 0
சென்னை: உலகம் முழுவதும் நாளை (ஜன.1) ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: புதிய சிந்தனை, புதிய…

உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Posted by - September 20, 2023 0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *