ஏறிய வேகத்துல பாதாளத்துக்கு போயாச்சு.. ZOHO Arattai

164 0

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய வேகத்தில் ஜோஹோ அரட்டை ஆப் (ZOHO Arattai App) ஆனது பர்சனல் சாட் மற்றும் குரூப் சாட் ஆகியவற்றுக்கு இ2இஇ (e2ee) என்னும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் (end to end encrypted) பாதுகாப்பை கொடுத்துள்ளது.

ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை ஆப் ஆனது வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக களமிறங்கியது. உள்நாட்டின் தயாரிப்பாக இருந்ததால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரையில் அதை டவுன்லோட் செய்தது மட்டுமல்லாமல், அரட்டை ஆப் மீதான ஆதரவை தெரியப்படுத்தினர்.இந்த ஆதரவால் கடந்த செப்டம்பர் நடுப்பகுதியில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் 3,000 ஆக இருந்த புதிய சைன்-அப்கள் (Sign-Ups) அக்டோபர் தொடக்கத்தில் 1.5 லட்சமாக மாறியது. கிட்டத்தட்ட 100 மடங்கு வளர்ச்சியை கொடுத்தது. ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டது. அரட்டை ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் என்கிற தனியுரிமை அம்சத்தை கொண்டிருக்கவில்லை. இதனாலேயே இந்த வீழ்ச்சியை பார்த்துள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், அப்படி ஏதும் கிடையாது என்பதை ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) நேரடியாக எக்ஸ் தளம் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். அனைத்து பர்சனல் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் இருக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான குரூப் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் கொடுக்கப்பட இருக்கிறது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ஆகவே, அரட்டை ஆப் ஆனது தனியுரிமை பாதுகாப்பை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த இ2இஇ பாதுகாப்பில் இரண்டு ஆப்ஷன்களை அரட்டை ஆப் ஆனது கொண்டிருக்கிறது.

Related Post

மனைவி இறந்ததால் விரக்தியில் வாழ்ந்த 62 வயது தந்தைக்கு திருமணம் செய்துவைத்த மகள்

Posted by - October 24, 2023 0
திருவனந்தபுரம்: திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கக்கூடிய ஒன்று. தான் கரம் பிடிக்கும் வாழ்க்கை துணையுடன் இறுதிவரை ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.…

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. “ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு”

Posted by - June 5, 2025 0
ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்திய அரசு, கடந்த பத்தாண்டுகளில், வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி…

புது ரூல்ஸ்.. CIBIL ஸ்கோர் விதிகளில் புது மாற்றம்.. தினமும் 100 ரூபாய் அபராதம்.. உடனே கவனியுங்க..

Posted by - December 6, 2024 0
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் தகவல் நிறுவனங்கள் தற்போது வங்கிகள் (bank) அல்லது ஃபைனான்சியல் நிறுவனங்கள் (non-banking finance companies – NBFC) வாடிக்கையாளர்களின் கடன்…

கொரோனா அச்சம் – மீண்டும் வருகிறது வொர்க் ப்ரம் ஹோம்…!

Posted by - December 28, 2022 0
கொரோனா பரவல் அச்சம் காரணமாக மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலை கொண்டு வர நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது புதியவகை கொரோனா பிஎஃப்…

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

Posted by - January 2, 2024 0
திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *