ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. “பச்சையா” ஆமாம்னு பதில் சொன்ன Gemini AI.. மோடியிடம் மன்னிப்பு கேட்ட Google!

358 0

இந்திய பிரதமர் மோடி (PM Modi) பற்றிய கேள்விக்கு “ஆமாம்” அவர் அப்படிப்பட்ட ஆளுதான் என்று பதில் கூறியதன் விளைவாக.. கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் (Generative AI Chatbot) ஆன ஜெமினி (Gemini) பெரிய சிக்கலில் மாட்டியது.இதன் தொடர்ச்சியாக.. “அடேய் ஜெமினி.. சோத்துல மண்ணு அள்ளி போட்டீயே டா!” என்று பதறி அடித்துக்கொண்டு, கூகுள் நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மோடியை பற்றி ஜெமினி அப்படி என்ன பதிலை கூறியது? கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்பதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இதோ விவரங்கள்:ஒரு பயனர் ​​”மோடி ஒரு பாசிசவாதியா?” என்று ஜெமினி ஏஐ-யிடம் கேட்ட போது, பிரதமர் மோடியின் கொள்கைகள் “பாசிசமாக” இருப்பதாக என்று சில வல்லுநர்கள் கருதுவதாக ஜெமினி ஏஐ பதில் அளித்துள்ளது. ஜெமினியின் இந்த பதில் கூகுள் நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையேயான ஒரு மோதலை தூண்டியது.

இந்த விஷயம், இந்தியாவில் ஏஐ இயங்குதளங்களின் கட்டுப்பாடுகள் பற்றிய விவாதங்களை தூண்டி உள்ளதால், இதை சமாளிக்கும் வண்ணம் – தனது ஏஐ தளமான ஜெமினி, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி தகாத கருத்துக்களை கூறியதற்காக இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரி உள்ளது. மேலும் ஜெமினி ஏஐ தளத்தின் நம்பகத்தன்மையற்ற தன்மையையும் கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.

பிரதமர் மோடி குறித்து ஜெமினி வெளியிட்ட ஆதாரமற்ற கருத்துகள் தொடர்பாக அரசு அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணை அமைச்சர் ஆன ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய அரசாங்கம் கூகுளின் மன்னிப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டது போல் தெரியவில்லை. “ஜெமினி ஏஐ தளத்தை நம்பகத்தன்மையற்றது என்று கூறுவது சரியான தற்காப்பு அல்ல” என்று கூறி கூகுளின் மன்னிப்பு கோரலை அமைச்சர் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பயனர்களுக்கு பதில்களையும், தீர்வுகளையும் வழங்கும் போது ஏஐ இயங்குதளங்கள் சோதனை கட்டங்களில் செயல்படக்கூடாது. குறிப்பாக பயனர்களுக்கு தவறான அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை வழங்கும் அபாயம் இருந்தால் நிச்சயம் அவைகள் சோதனை கட்டங்களில் செயல்படக்கூடாது என்றும் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தி உள்ளார்.

முறையான பாதுகாப்புகள் அல்லது வெளிப்பாடுகள் இல்லாமல் இந்தியாவை ஒரு சோதனைக் களமாக ஏஐ இயங்குதளங்கள் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது என்றும் அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார். மோடி பற்றி ஜெமினி ஏஐ சொன்ன பதிலால், ஏஐ இயங்குதளங்கள் செயல்பட அனுமதி தேவை என்று இந்திய அரசாங்கம் அறிவித்ததுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பிரச்சனைக்கு நடுவில் கூகுள் ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி 4-ஐ ஓரங்கட்டும் நோக்கத்தின்கீழ், ஆந்த்ரோபிக் (Anthropic) என்கிற ஒரு ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமானது கிளாட் 3 (Claude 3) என்று ஏஐ சாட்பாட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன்கீழ் ஹைக்கூ (Haiku), சோனட் (Sonnet) மற்றும் ஓபஸ் (Opus) என்கிற மூன்று மாறுபாடுகள் அணுக கிடைக்கும்.

அதாவது கூகுள் ஜெமினி ஏஐ ஆனது எப்படி, அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano) என்கிற 3 வெர்ஷன்களில் கிடைக்கிறதோ.. எப்படி வெவ்வேறு வகையான பணிகளுக்காக பயன்படுத்தபடுகிறதோ. அதேபோல தான் கிளாட் 3-ன் ஹைக்கூ, சோனட் மற்றும் ஓபஸ் செயல்படும்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கூற்றுப்படி, கிளாட் 3 ஆனது ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி ஆகிய இரண்டை விடவும் சிறப்பாக செயல்படுகிறது. பன்முகத்தன்மை (Multimodality), மேம்படுத்தப்பட்ட துல்லியம் (Improved accuracy), மேம்பட்ட சூழல் புரிதல் (Enhanced context understanding) மற்றும் வேகமான ரெஸ்பான்ஸ் டைம்ஸ் (Faster response times) என கிளாட் 3-ன் மூன்று மாறுபாடுகளும் பல பரிமாணங்களில் விதிவிலக்கான செயல்திறனை வழங்குவதாக ஆந்த்ரோபிக் நிறுவனம் கூறுகிறது.

Related Post

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்

Posted by - May 7, 2025 0
தொலைக்காட்சி ஒன்றின் நேரலையில் பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்த கருத்துக்கு, அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரே ஃபேக்ட் செக் செய்து அவரது மூக்கை உடைத்த சம்பவம்…

சிம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. வருகிறது E-Sim.. ஆண்ட்ராய்டு போன் வைத்து உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Posted by - January 19, 2023 0
Android 13 | இவை சாத்தியமானால், நிறுவனம் தனது செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய உதாரணம்!…

அன்றே சொன்ன இந்தியா..! டிக்டாக்கிற்கு போதாத காலம்..! அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்திலும் தடையா?

Posted by - January 19, 2025 0
TikTok: அமெரிக்க அரசின் தடை உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியை தொடர்ந்து, டிக்டாக் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டிக்டாக் சேவை நிறுத்தம்: தேசிய தடை விதிக்கப்படுவதற்கு முன்பு எந்த நடவடிக்கையும்…

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் – மகளிரை பெருமைப்படுத்த சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

Posted by - March 8, 2023 0
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு டூடுல் வெளியிட்டு பெண்களை கூகுள் கவுரவித்துள்ளது. பெண்களுக்‍கு பெண்கள் ஆதரவாக இருக்‍க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தன் சக பெண்களுக்‍கு…

பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

Posted by - November 22, 2025 0
ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது தமிழரசு கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் (Colombo) நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *