‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 18-வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேர் கைது

83 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி சென்​னை​யில் நேற்று 18-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தமிழகத்​தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணி​யில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதன் பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை ஊதி​யத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு உள்​ளது. இதனால் பாதிக்​கப்​பட்​டுள்ள 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்​பாட்டை சரிசெய்​யக் கோரி நீண்ட கால​மாக போராடி வரு​கின்​றனர்.

வெவ்​வேறு இடங்​களில்… இந்த நிலை​யில், சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கம் சார்​பில் சென்​னை​யில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி கால​வரையற்ற போராட்​டம் தொடங்​கப்​பட்​டது.

கல்​வித் துறை தலைமை அலு​வல​கம் அமைந்​துள்ள நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகம், எழும்​பூரில் உள்ள மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி அலு​வல​கம், சேப்​பாக்​கம் எழில​கம், கடற்​கரை சாலை​யில் உள்ள மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் என வெவ்​வேறு இடங்​களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

17-வது நாளான நேற்று முன்​தினம் (ஞா​யிறு) மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​து, மாலை​யில் விடு​வித்​தனர். இந்​நிலை​யில் 18-வது நாளான நேற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் பேரணி​யாக சென்று போராட்​டம் நடத்​தினர்.

‘சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும், திமுக அரசே! தேர்​தல் வாக்​குறு​தியை நிறை வேற்​று, ஊதிய உயர்வு கேட்​க​வில்​லை, உரிய ஊதி​யம்​தான் கேட்​கிறோம்’ என்று அவர்​கள் கோஷம் எழுப்​பினர். போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அனை​வரும் மாலை​யில் விடுவிக்​கப்​பட்டனர்​.

Related Post

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு: தாம்பரம் 2-வது இடம் பிடித்தது

Posted by - August 14, 2023 0
திருச்சி: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா…

மாஸ்க், தடுப்பூசி, ஆக்சிஜன் எல்லாத்தை ரெடி பண்ணுங்க.. மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

Posted by - December 27, 2022 0
கொரோனா தடுப்பூசி மையம் போதிய மருத்துவ பணியாளர்களுடன் தயாராக இருக்க மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை…

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - August 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - January 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

சென்னையில் இருந்து விலகி சென்றது மிச்சாங் புயல்

Posted by - December 5, 2023 0
சென்னை: மிச்சாங் புயல் சென்னை அருகே வந்து மழை, காற்றால் துவம்சம் செய்தது. பின்னர் சென்னையில் இருந்து விலகி ஆந்திராவுக்கு சென்றது. நெல்லூர்-காவாலி இடையே இன்று (செவ்வாய்க்கிழமை)…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *