Generated Image November 22 2025 5 37PM

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

178 0

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும் நாட்களுக்கான ரெட் அலெர்ட்டையும் அறிவித்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

“‘டிட்வா‘ புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்வு – சென்னையில் அதிக மழை இருக்கும்“

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, ‘டிட்வா‘ புயல் உருவாகியுள்ளதை உறுதி செய்தார். அதோடு, இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று கூறிய அவர், இதனால் சென்னையில் அதிக மழை பொழிவிற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

நவ. 28-ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

மேலும், டிட்வா புயலால் நாளை(28.11.25) நாகை, திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதால், ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக தெரிவித்தார். அதோடு, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து, கடலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளளது.

நவ. 29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

இதேபோல், நாளை மறுநாள்(29.11.25) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக அமுதா தெரிவித்தார்.

மேலும், சென்னை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும், தஞ்சாவூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதோடு, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அமுதா தெரிவித்தார்.

வடக்கு, வடமேற்கு நோக்கி நகரும் ‘டிட்வா‘ புயல்

தொடர்ந்து பேசிய அவர், டிட்வா புயல் வடக்க, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், வரும் 30-ம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல் பகுதியை நெருங்கும் எனவும் தெரிவித்தார்.

புயல் நெருங்கி வருவதால், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என கூறிய அவர், 30-ம் தேதி வாக்கில் சென்னையில் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் கூறினார். மேலும், வட தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Post

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…
Generated Image November 05 2025 10 13AM

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Posted by - November 5, 2025 0
“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்” “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று…

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக மாறும்

Posted by - May 6, 2023 0
சென்னை: தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

சென்னையில் வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு வைத்ததால் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 10, 2024 0
சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை…

இந்த விழாவுக்கு அசுரன் பட டயலாக் முக்கிய காரணம் – மேடையில் விஜய் அதிரடி

Posted by - June 17, 2023 0
மாணவர்களை சந்திக்கும் நிகழ்வில் நடிகர் விஜய் தனுஷின் அசுரன் பட வசனத்தை மேற்கோள்காட்டினார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *