தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை – நூதன போராட்டம்!

243 0

“எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன்.”

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். வெளியாவது, முதலில் இரு நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவித்து பிறகு ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றது, சம்பவத்தின் போது ஞானசேகரன் செல்போனில் யாரிடமோ, ‘சார்’ என பேசியதாக முதலில் தகவல் வெளியானது, பிறகு அவர் போனை ஃப்ளைட் மோடில் வைத்துவிட்டு போலியாக பேசினார் என்று தகவல் வெளியானது என பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது.மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுக நிர்வாகி என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததும், அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்திருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.இந்நிலையில், நேற்று கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில் அவர், “எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன். தொண்டர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள், வீட்டு வாசலில் நின்றால் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை. நடுத்தர மக்கள் வெளியில் வர வேண்டும். மீடியாவில் இதை விவாதிக்க வேண்டும். இதைப் பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.இதற்கிடையே, சொன்னது போலவே, கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். 6 முறை எனக் கூறிய நிலையில், மொத்தம் 8 முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்து உடலை வருத்திக் கொண்டார்.9ம் முறை அடிக்க முயன்றபோது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரைத் தடுத்த நிறுத்தினர். முன்னதாக, வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்த ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

Related Post

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..

Posted by - June 12, 2025 0
பொன்முடி ஓசி பஸ் என சொன்னது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் திமுக MLA-ஏ இப்படி சொல்லியிருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது. பெண்கள் ஓசி பஸ்ஸில்…

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – போர்களம் போல காட்சியளிக்கும் அன்பழகன் வளாகம் | Teachers Protest

Posted by - October 4, 2023 0
சம வேலைக்கு சம ஊதியம்: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில்…

“நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்” பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - May 17, 2025 0
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என ஸ்டாலின் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

Posted by - June 23, 2025 0
பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *