தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் தெரியுமா?

162 0

#happydiwali #festival #india #diwalidecorations #diwaligifts #love #diwalivibes #instagram #diwalidecor #deepavali #instagood #festiveseason #fashion #diwalihampers #festivevibes #homedecor #indianfestival #trending #pixeltamil #photography #diwalicelebration #celebration #festivaloflights #bhfyp #navratri #art #pixelmedia #pixeltv #festive pixeltamil.com

 

இந்து மதத்தில் தீபாவளி பண்டிகையின் போது எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கமாக உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.தீபாவளி பண்டிகை வந்தாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் என்றே சொல்லலாம்.

இந்து மத நம்பிக்கையின் படி நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாளை அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடைகளும் தான்.

அனைவரும் தீபாவளி என்று அதிகாலை எழுந்து புனித நீராடி புத்தாடை அணிந்துவிட்டு, பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். இந்த நாளில் முக்கியமான ஒரு விஷயமாக எண்ணெய் குளியல் பார்க்கப்படுகிறது.தீபாவளி அன்று காலை 3 மணியிலிருந்து 4;30 மணிக்குள் தலையில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

தீபாவளி அன்று இந்த கங்கா ஸ்நானம் மேற்கொண்டால் கங்கையில் குளித்த பலனை பெறலாம் என்பது ஐதீகம். தீபாவளி அன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுடு தண்ணீரில் கங்கா தேவியும் வாசம் செய்வார்கள் என்றும் சீயக்காயில் வாயு பகவான் வாசம் செய்வதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

அதனால் இந்த நேரத்தை பயன்படுத்தி குளித்துவிட்டு காலை சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது ஆறு மணிக்கு முன்பு பூஜைகளை செய்து முடித்து விட வேண்டும். இதுவே தீபாவளி கொண்டாடும் முறையாகும். மேலும் தீபாவளி அன்று வீட்டை சுத்தம் செய்தல் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்னாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்பதும் நம்பிக்கையாகும்.

Related Post

நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - May 29, 2025 0
சித்த மருத்துவர் 2 மணி நேரம் பேசிக்கொண்ட நேரத்தை இழுத்தடித்ததே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு காரணம் என்று அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான…

மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

Posted by - June 1, 2023 0
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார்,…

கொளுத்தும் கோடை! – ஏசி விற்பனை உயர்வு…!

Posted by - April 24, 2024 0
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மக்கள் தங்கள் இல்லங்களில் மின்விசிறி, ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மதிய நேரத்தில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் வீட்டின் உள்ளே அனல்…

நைட் தூங்குறதுக்கு முன்னாடி ‘இந்த’ பழத்தை சாப்பிட்டா போதுமாம்… நிம்மதியான தூக்கம் வருமாம்..!

Posted by - December 20, 2023 0
உங்களின் உறக்கத்தின் தரம் நீங்கள் உறங்குவதற்கு முன் உண்ணும் உணவைப் பொறுத்தது. படுக்கைக்கு முன் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள…

டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

Posted by - October 31, 2023 0
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *