தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

110 0

தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டை என்று கூறப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டதும், எம்ஜிஆர் மதுரையிலும் போட்டியிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிமுக-விற்கும், தென் தமிழகத்திற்கும் இடையே அதிக பிணைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1991ம் ஆண்டு முதல் கடந்த 2021ம் ஆண்டு வரை தென் தமிழகத்தில் அதிமுக-வின் வெற்றி எப்படி இருந்தது என்பதை கீழே காணலாம். 1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தென் தமிழகத்தில் மொத்தம் 63 தொகுதிகள் இருந்தது. பின்னர், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 58 ஆக குறைந்தது.

1991ம் ஆண்டு:

1991ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மொத்தம் 164 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் தென் தமிழகத்தில் மட்டும் அதிமுக 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1996ம் ஆண்டு:

1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் தென் தமிழகத்தில் 2 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி மீதான அதிருப்தியில் இந்த தோல்வியை அதிமுக எதிர்கொண்டது.

2001ம் ஆண்டு:

2001ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் தென் தமிழகத்தில் மட்டும் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றியால் மீண்டும் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் ஆனார்.

2006ம் ஆண்டு:

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் தென் தமிழகத்தில் அதிமுக மொத்தமாக 16 இடங்களில் வெற்றி பெற்றது.

2011ம் ஆண்டு:

மின்தடை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. மொத்தம் 150 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில் 33 இடங்களில் வெற்றி பெற்றது.

2016ம் ஆண்டு:

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை அதிமுக இந்த தேர்தலில் பிடித்தது. தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் அதிமுக வெற்றி பெற,  தென் தமிழகத்தில் மட்டும் 32 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த ஆட்சியின்போதுதான் ஜெயலலிதா காலமானார்.

2021ம் ஆண்டு:

ஜெயலிதா இல்லாமல் முதன்முறையாக பொதுத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த தேர்தலில் அதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் 16 தொகுதிகள் தென் தமிழகத்தில் பெற்ற வெற்றி ஆகும்.

தென் தமிழகம் என்பது அதிமுக-வின் கோட்டையா? என்பது கடந்த கால தரவுகள் மூலம் அறியலாம். தென் தமிழகத்தில் அதிமுக-வின் அடையாளமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்த நிலையில், முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை இணைக்கும் முக்கிய நபராக உள்ள தினகரன் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், சசிகலா அதிமுக கூட்டணிக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வின் வசம் தென் தமிழகம் செல்லுமா? இல்லையா? என்பது மே 4ம் தேதி தெரிந்துவிடும்.

Related Post

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை

Posted by - November 24, 2025 0
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை…

மனம் திறந்த ஓபிஎஸ்.பொறுமையாக இருந்தது ஏன்?

Posted by - February 24, 2026 0
ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக- ஓபிஎஸ். கட்சி விதியை…

2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

Posted by - December 30, 2025 0
 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும்…

அதிமுகவுக்கு நயினார்… ஓபிஎஸ் – தினகரனுக்கு அண்ணாமலை!

Posted by - December 11, 2025 0
அதிமுக தலைமைக்குப் பிடிக்காத தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிக நெருக்கமாக இருப்பதில் யாருக்கும் வியப்பில்லை. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத நபரான…

“செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது” – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
சென்னை: நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *