நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

248 0

தர்மபுரி:

தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி, கடல் உணவுகளின் விலை கடுமையாக சரிவடைவது வழக்கம்.. காரணம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள்..

அந்தவகையில், இந்த வருடமும் புரட்டாசி மாதம் தொடங்கியிருக்கிறது.. இதனால், ஆடு, மாடு, கோழி, முட்டை, மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. இறைச்சியை குறைவான அளவிலேயே வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டது.

திருப்புவனம் சந்தை:

குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டுவது வழக்கம்.. இந்த திருப்புவனம் மார்க்கெட்டில்தான், வாரம்தோறும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடை சந்தையும், பிறகு காய்கறி சந்தையும் நடைபெறுவது வழக்கம். கால்நடை சந்தையில் ஆடு, கோழி, தவிர, சேவல், வாத்து போன்றவைகளும் விற்பனை செய்யப்படும்.. இதற்கு காரணம், திருப்புவனத்தைச் சுற்றிலும் பெத்தானேந்தல், மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் ஆடு, கோழிகளை விவசாயிகள் வளர்த்து, இங்குவந்துதான் விற்பனை செய்கிறார்கள்.. எப்போதுமே 300 முதல் 1000 ஆடு, கோழிகள் வரை விற்பனையாகும்.. ஆனால், புரட்டாசி புரட்டாசி தொடங்கிவிட்டதால், ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தும் சரியாக விலைக்கு போகவில்லையாம்.

ஆட்டுக்கறி:

10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10,000 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது, வெறும் ரூ.8000க்கு மட்டுமே விலை போவதாக கவலையுடன் கூறுகிறார்கள். நாட்டுக்கோழி விலையும், கிலோவுக்கு ரூ.350 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.. இப்போது, ரூ.450ஆக உயர்ந்துவிட்டதாம். 25 கிலோ எடை கொண்ட கிடா 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. புரட்டாசி மாதம் முடியும் வரைக்கும், இறைச்சி விலை குறைவாகவே விற்கப்படும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருத்தம்:

இதுபோலவே, தர்மபுரி மாவட்டத்திலும் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.. இங்குள்ள நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.. இதற்காகவே வியாபாரிகள், கால்நடைகளை கொண்டுவந்து இங்கு விற்றுவிட்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.. இதற்காகவே, ஆட்டுச்சந்தை பிரத்யேகமாக நடைபெற்றும் வருகின்றது.. தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்காக இன்று வந்திருந்தனர்.

விற்பனை:

ஆனால், காலை 6 மணிக்கு கூடிய ஆட்டுச்சந்தையில் சிறிய அளவில ஆடுகள் 2, 500 ரூபாயில் துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 16,000 ரூபாயில் வரை மட்டுமே விற்பனையானதாம்.. இந்த புரட்டாசி முடியும்வரை இப்படித்தான் மந்த நிலையில் விற்பனையாகும் என்கிறார்கள்.

Related Post

ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி

Posted by - May 23, 2025 0
திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தெய்வச்செயலுக்கு எதிராக புகார் அளிக்க, பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது திமுகவை சேர்ந்த முக்கிய…

தமிழ் புத்தாண்டு 2023… செய்ய வேண்டியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..!

Posted by - April 12, 2023 0
அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது. சித்திரை மாத முதல் நாளை உலகத்…

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Posted by - October 8, 2024 0
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில்…

நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

Posted by - January 10, 2025 0
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது…

உடல், மனம் இரண்டும் சமநிலையை அடைய உதவும் பார்சுவ பகாசனம்

Posted by - March 2, 2023 0
வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *