நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

236 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினர் அண்ணா பல்கலை விவகாரத்தை கையில் எடுத்த நிலையில், இன்று திமுகவினர் அண்ணா நகர் வழக்கை கையில் எடுத்துள்ளது , சட்டப்பேரவையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

’யார் அந்த சார்?” – அதிமுக

இந்த ஆண்டின், முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது, ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே, ஆளுநர் தனது உரையை புறக்கணித்துச் சென்றது பெரும் பேசுபொருளானது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவை தொடங்கியது முதலே,அதிமுகவினர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கையில் எடுத்தனர். குறிப்பாக , அதிமுகவினர் அனைவரும் சட்டையில், யார் அந்த சார் என்ற பேட்சை அணிந்து குரல் எழுப்பினர்.  இதனால், முதல் நாளே எதிர்க்கட்சிகளின் குரலால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

 

முதலமைச்சர் ஸ்டாலின் பதில்:

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாணவிக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதை தவிர, வேறு எந்த நோக்கமும் தமிழ்நாடு அரசுக்கு கிடையாது; குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.  காவல்துறை துரித நடவடிக்கை எடுத்த பின்னரும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததை குறை சொல்கின்றனர். ஆனால் அதற்கு காரணம் தேசிய தகவல் மையம் தான். அதற்கு அந்த அமைப்பும் விளக்கம் கொடுத்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மேலும், யார் அந்த சார் என்ற எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதில் அளிக்கையில், “  உண்மையாகவே எதிர்க்கட்களிடம் ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவியுங்கள்; அதை தவிர்த்து வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.

”இவன்தான் அந்த சார்” – திமுக

ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து யார் அந்த சார் என்ற பேட்சுடன் வருகை தர ஆரம்பித்தனர்.

 

இந்நிலையில், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் , குற்றவாளியை பாதுகாக்க முயற்சித்து, தப்பிக்க நினைத்த அதிமுக பிரமுக சுதாகர் கைதானதாக கூறப்படும் நிலையில், சுதாகரின் புகைப்படத்துடன், ” இவன் தான் அந்த சார்” என்ற பதாகையுடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். மேலும், இவன் தான் , அந்த சார் என்ற கோசங்களும் எழுப்பியதால், சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், யார் அந்த சார் என்று அதிமுகவினரும், இவன் தான் சார் என்று திமுகவினர் ஒருவொருக்கொருவர் எதிர்ப்பு தெரிவித்தது சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Related Post

அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – டிடிவி தினகரன்

Posted by - May 20, 2024 0
கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் திருப்பூர், கரூரில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின்…

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் 580-வது நாளாக மாற்றமில்லை

Posted by - December 22, 2023 0
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.…

‘கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திமுக அரசு’ – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - May 16, 2023 0
திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. – அண்ணாமலை கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு செயலிழந்து நிற்பதாக பாஜக தமிழக தலைவர்…

மிரட்டும் டெங்கு காய்ச்சலால் ஒரே நாளில் 59 பேர் அனுமதி- தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Posted by - November 27, 2023 0
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி…

பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

Posted by - August 27, 2024 0
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *