பாதியில் வெளிநடப்பு.. அவையில் சலசலப்பு.. கடந்தாண்டு ஆளுநர் உரையை மறக்க முடியுமா?

313 0

தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் இருந்து வந்த நிலையில், கடந்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில வாக்கியங்களை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவராகவே சிலவற்றை சேர்த்து ஆளுநர் உரையில் வாசித்தார்.

இது திமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக செயல்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை தயாரிக்கச் செய்தார். ஆளுநர் உரையை நிறைவு செய்ததும் தொடர்ந்து அவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என விமர்சித்ததுடன், ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற தொடங்கியதுமே அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டனர். எனினும், ஸ்டாலின் தமிழில் ஆற்றிய உரையின் விளக்கத்தை தனது பாதுகாவலர் மூலமாக அறிந்து கொண்ட ஆளுநரும், ஸ்டாலின் உரையை நிறைவு செய்வதற்கு முன்பாகவே, அவையில் இருந்து புறப்பட்டார். வழக்கமாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகே ஆளுநர் அவையில் இருந்து புறப்பட்டுச் செல்வார். ஆனால், தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.அதனை தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன், முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், ஆகிய கொள்கைகள் இந்த அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது என்ற வாசகங்களை ஆளுநர் ரவி வாசிக்காமல் தவிர்த்ததாக கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவத்திற்கு பிறகும் ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான பனிப்போர் முற்றிய நிலையில், பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்ட நிலையில், நீதிமன்றம் தலையிட்டு இரு தரப்புக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியது. இந்த சூழலில், இன்று ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டுக்கான முதல் பேரவைக் கூட்டம் தொடங்குகிறது.

Related Post

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் 580-வது நாளாக மாற்றமில்லை

Posted by - December 22, 2023 0
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.…

மனசாட்சி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார் – வானதி சீனிவாசன் கண்டிப்பு..!!

Posted by - May 7, 2024 0
போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் திமுகவை விட பாஜகவை கடுமையாக விமர்சிப்பவர். திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறைக்கு வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக பாஜக…

இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வரக்கூடாதா? அப்ப இந்த எண்ணெயை உங்க சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..

Posted by - October 27, 2023 0
தற்போது சமையலில் பயன்படுத்த ஏராளமான எண்ணெய்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களைப் பார்க்கும் போது எந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற ஒரு…

சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை : ஓட்டுநர் கைது!

Posted by - February 18, 2025 0
தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் திருவோணம்…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *