மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா !

107 0

நடிகர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்

நடிகர் விஜய் பிரபல நடிகையுடன் திருமணம் கடந்த உறவில் இருந்து வருவது ரசிகர்கள் அனைவரும் அறிந்த விஷயமே. இப்படியான நிலையில் விஜயின் மனைவி விஜயிடம் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர் சங்கீதா என்றபோதிலும் தவெக ஆதரவாளர்கள் விஜயை தியாக சித்தரித்து பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார்கள். இந்த பதிவுகள் பார்ப்போருக்கு எரிச்சலையே ஏற்படுத்துகின்றன.

விஜயுடன் 26 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தனது கணவர் விஜய் பிரபல நடிகை ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்து வருவதாக சங்கீதா இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். விஜய் அந்த நடிகையுடன் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஒன்றாக பயணித்ததாகவும் அந்த நடிகை விஜயுடன் தனது புகைப்படங்களையும் பதிவிட்டதாகவும் இந்த மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையை பேசி தீர்க்க நினைத்த சங்கீதாவை விஜய் புறந்தள்ளி வைத்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்து லண்டனில் சங்கீதா தனியாக வசித்து வந்துள்ளார்.

கள்ள உறவை கொண்டாடிய ரசிகர்கள்

விஜய்க்கும் பிரபல நடிகை ஒருவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் வெளியான போது அவரது ரசிகர்கள் இந்த உறவை ஆதரிக்கவே செய்தனர். இருவரது புகைப்படங்களை பகிர்ந்து கபிள் கோல்ஸ் மீம்ஸ் வெளியிட்டார்கள். இருவரையும் ஐடலைஸ் செய்தார்கள். காதலிப்பது விஜயின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் இந்த விஷயத்தில் விஜயின் மனைவி சங்கீதாவின் மனநிலையையை யாரும் பொருட்படுத்தவில்லை.

விஜயை தியாகியாக்கும் தெவக ஆதரவாளர்கள்

தற்போது விஜயின் மீது குற்றசாட்டுகளை வைத்து சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில் இது விஜய்க்கு எதிரான சதியாகவே பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் விஜய்க்கு எதிராக அவரது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குள்ளாவது அரசியல் சதியாக பார்க்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அதற்காக விஜயை உத்தரமாக்க தேவையில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் தனது மனைவியை அவர் ஒரு சராசரி ஆணாகவே நடத்தியிருக்கிறார். மேலும் 4 ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு இப்போ ஏன் இதை சொல்றீங்க என பாதிக்கப்பட்ட சங்கீதாவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அபத்தத்தின் உச்சம்.

திருமணம் கடந்த உறவில் இருந்த விஜயை தியாகியாக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை காணமுடிகிறது. 41  பேர் உயிரிழந்தபோதே முட்டுக்கொடுத்த இந்த கூட்டம் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பது நம்முடைய முட்டாள்தனம் தானோ?

Related Post

தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: முதல்வருக்கு உதயநிதி வேண்டுகோள்

Posted by - December 15, 2025 0
திரு​வண்​ணா​மலை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார். திரு​வண்​ணா​மலை​யில்…

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - August 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…

முரண்டு பிடிக்கும் விசிக, ம.கம்யூ, மநீம.! கூட்டணிக்குள் நடப்பது என்ன.?

Posted by - March 20, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை…

துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி

Posted by - August 7, 2025 0
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக…

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - July 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *