ChatGPT Image Mar 26 2026 05 38 30 PM

மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு?

159 0

மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல், எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தகவல்கள் பரவிய நிலையில், அடுத்த சில நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவி வருகிறது.

மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் ஏற்படும் அசாதாரண சூழலை கையாளும் பொருட்டு மாநில முதலமைச்சர்களுடம் பிரதமர் மோடி நாளை (மார்ச் 27) ஆலோசனை நடத்துகிறார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு மாதத்தை இந்த போர் நெருங்கியுள்ள நிலையில், இதனால் உலக நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைக் கையாள மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த தகவலை மறுத்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு போல விரைவில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நேரலாம் எனவும், இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என தகவல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இப்படியான நிலையில் மேற்கு ஆசிய மோதல் தொடர்ந்து நீடித்தால் ஏற்படும் அசாதாரண சூழலை கையாளும் பொருட்டு தயார் நிலை மற்றும் திட்டங்களை உருவாக்க  பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 27) மாலை காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள மாநில முதலமைச்சர்கள் மட்டும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தலைமை செயலாளர்கள் பங்கேற்க உள்ளார்கள் என சொல்லப்படுகிறது.

Related Post

முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

Posted by - August 10, 2024 0
நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில்…

செய்தியாளரிடம் கூகுள் பண்ணச் சொன்ன பும்ரா- பதில் அளித்த சுந்தர் பிச்சை

Posted by - December 20, 2024 0
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

‘சிபில் ஸ்கோர்’ பிரச்சினையை தீர்க்க… – சு.வெங்கடேசன் எம்.பி முன்வைக்கும் யோசனை

Posted by - June 27, 2025 0
மதுரை: ‘சிபில் ஸ்கோர்’ முறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை ரிசர்வ் வங்கி தீர்மானிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

6 வயதில் முதல் இணையதளம்…11 வயதில் சொந்த நிறுவனம்…உலகின் இளைய பெண் CEO !

Posted by - December 9, 2024 0
World Youngest CEO – இந்தியாவின் – கேரளா மாநிலத்தில் கோழிகோடு நகரைச் சார்ந்தவர் தான் ஸ்ரீ லெட்சுமி சுரேஷ், 1998 யில் பிறந்தவர், தனக்கு 3…

45 நாட்களில் ரூ.4 கோடியை அள்ளிய ஆந்திரா தக்காளி விவசாயி

Posted by - July 31, 2023 0
சித்தூர்: எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று ‘இரட்டைச் சதத்தை’ நோக்கி ‘நாட் அவுட்’டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *