முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் “சூப்பர்” சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில் முலாம்பழத்தை சாப்பிடலாமா?

413 0

சென்னை:

முலாம்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முலாம்பழம் ஜூஸ் சாப்பிட்டாலே போதும், ஏகப்பட்ட உபாதைகள் தீரும்.

வைட்டமின் A, B, C, B1, B6 K, கால்சியம், மக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவற்றை தன்னுள் அடக்கி வைத்திருப்பது இந்த முலாம்பழம்.. உடல் சூட்டை தணிக்கக்கூடிய தன்மை இந்த பழத்துக்கு உண்டு.

இதிலுள்ள வைட்டமின் A உள்ளதால், வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த வைட்டமின் A, கண் தொடர்பான பிரச்சனைகளை அண்ட விடாமல் காக்கிறது. முலாம்பழத்தில் வைட்டமின் C நிறைந்துள்ளதால், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தசை பிடிப்பிலிருந்து விடுபட உதவுகிறது.. அத்துடன், அதிகப்படியான மாதவிடாய் பிரச்சனையும் சீராகும்.

முலாம்பழம்:

இந்த முலாம்பழத்தில், வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், சருமத்தை கவசம் போல பாதுகாக்கிறது.. மிருதுவான சருமத்துக்கு துணை புரிகிறது. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் அதை வெளியேற்றும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு..முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் "சூப்பர்" சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில்  முலாம்பழத்தை சாப்பிடலாமா? | Do you know the Excellent Health Benefits in  Muskmelon and Amazing ...

மன அழுத்தத்தை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி செய்கிறது இந்த பழம். முலாம்பழத்தின் சதையுடன், அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவார்கள்.. உடலில் உஷ்ணம் குறைய வேண்டுமானால், இந்த விதை கலந்த பழத்துடன், சீரகப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தாலே போதும்.. மிகச்சிறந்த சிறுநீர் பெருக்கியாக இது திகழ்கிறது.

நார்ச்சத்து:

நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், வயிற்றை சுத்தப்படுத்தி, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.. குடல் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. உடல் சூட்டையே தணிப்பதுடன், மூல நோய்க்கும் நிவாரணத்தை தருகிறது இந்த முலாம்பழம்..

நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடிய இந்த பழம், கல்லீரல் கோளாறுகளையும், வயிறு உபாதைகளையும் தீர்க்கக்கூடியது. வயிற்றுப்புண், வாய்ப்புண்களில் அவதிப்படுபவர்கள், இந்த பழத்தில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலே எளிதில் குணம் பெறலாம், கர்ப்பிணிகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.. இதை பழத்தை சாப்பிடுவதால், குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்குமாம்..

நீர் சத்துக்கள்:

நீர்ச்சத்து நிறைந்த இந்த பழம் சாப்பிடும்போது, உடலில் தண்ணீர் சத்து பற்றாக்குறை தீர்கிறது.. ஆனாலும், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிறு உபாதைகள் வரலாம் என்கிறார்கள்.. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகளை அண்ட விடாமல் செய்கிறது இந்த பழம்.. காரணம், இந்த முலாம்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தத்தை குறைப்பத்தில் பெரும் பங்காற்றுகிறது. அத்துடன், ரத்த கட்டிகள் ஏற்படாமலும் தடுக்கிறது.. மொத்தத்தில் இதயத்துக்கு நன்மை தரக்கூடிய பழமாக இந்த முலாம்பழம் விளங்குகிறது.

முலாம்பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக உள்ளதால் புற்றுநோயை தடுக்கவும், நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்ல உடலில் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அடியோடு அழிக்கவும் இப்பழம் உதவுகிறது.

முலாம்பழம்:

கலோரிகளும், கொழுப்புகளும் மிக குறைவாக உள்ளதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழம் என்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், இந்த பழத்தை கட்டாயம் உபயோகிக்கலாம்.. முலாம் பழத்தில் உள்ள கொலாஜென் என்ற புரதக்கலவையானது, சருமம் போன்ற திசுக்களின் செல்களை பாதுகக்கிறது. அத்துடன், உடலில் ஏற்படும் காயங்களை வேகமாக குணப்படுத்தவும், தோலின் உறுதித்தன்மையைக் காக்கவும் கொலாஜென் உதவுகிறது.

Related Post

ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன இது? ஏன் இப்படி?

Posted by - September 25, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான…

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

Posted by - September 20, 2023 0
தர்மபுரி: தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு,…

பிரபாகரன் மகள் துவாரகா உருவம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது? சர்வதேச உளவு அமைப்புகள் சந்தேகம்

Posted by - November 28, 2023 0
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள்…

”சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்கவேண்டும்..” – தவெக தலைவர் விஜய்

Posted by - January 6, 2025 0
இன்று நடைபெற்ற நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பேசுபொருளான நிலையில், சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என தவெக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *