ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

177 0

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் விஜய்

சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. இன்னும் 4 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக- அதிமுக மட்டுமே கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சி அமைத்து வரும் நிலையில், அதனை மாற்றி அமைக்கும் வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என தனது கட்சிக்கு பெயர் சூட்டிய விஜய், விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தியுள்ளார். அடுத்ததாக மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக செல்ல சுற்றுப்பயணத்தை அமைத்திருந்தார்.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு

திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை விஜய் முடித்த நிலையில், கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அளவுக்கதிகமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக எந்த வித நிகழ்வுகளிலும் விஜய் கலந்து கொள்ளாமல் அமைதி காத்துவந்தார். இதனையடுத்து கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்தர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். எனவே அடுத்தகட்ட பிரச்சாரம் தொடர்பாக விஜய்  என்ன முடிவு எடுக்கப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் மீண்டும் பிரச்சாரம்

அந்த வகையில் மீண்டும் பொதுமக்களை சந்திக்கும் வகையில் பிரச்சார கூட்டங்களை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.  டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் தவெக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனை விஜய் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது பிரச்சார பயணத்தை சேலத்தில் தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த முறை வார விடுமுறை நாட்களில் மட்டுமே பிரச்சார கூட்டங்களை விஜய் நடத்திய நிலையில் தற்போது வார நாட்களில் நடத்த இருப்பதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க காவல் ஆணையரிடம் தவெக தரப்பில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Post

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - August 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…

ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!

Posted by - July 25, 2025 0
Anbumani Walking Rally: “அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்” பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல்…

இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை!

Posted by - January 5, 2026 0
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சம வேலைக்கு சம…

என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்

Posted by - October 8, 2025 0
சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர்…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *