அடடே இதெல்லாம் தெரியாம போச்சே.. சர்வதேச எழுத்தறிவு தினம்.. சுவாரஸ்ய தகவல்கள்

215 0

நமது பிரபஞ்சத்தில் நாம் பிறந்த தினம் தவிர்த்து- பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்று பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் என ஆண்டின் 365 நாட்களில் 10 முதல் 15 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. கொண்டாட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது கிடையாது, என்ற போதிலும் உலகளவில் சிறப்பு தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது இயற்கையாகி விட்டது.

நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும், நமது கவலைகளில் இருந்து ஒருசில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் வகையிலும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், ஆண்டின் 365 நாட்களிலும் ஏதேனும் ஒரு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நம்மில் பலரும் அறிந்து இருப்போம்.செப்.08: இன்று என்ன? - சர்வதேச எழுத்தறிவு தினம் | International Literacy  Day - hindutamil.in

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 26, 1966-ம் ஆண்டு யுனெஸ்கோவின் 14-வது பொதுக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், எழுத்தறிவை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவது உள்ளிட்டவை சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம் ஆகும். இந்தியாவில் எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

2011-ம் ஆண்டு நிலவரப்படி ஏழு வயதுக்கு மேற்பட்டோர், சிறிய தகவலை எழுதவும், படிக்கவும் தெரிந்து இருந்தால் அவர் எழுத்தறிவு பெற்றவராக கருதப்படுவார் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 74.04 சதவீதம் ஆகும். இதில் அதிக எழுத்தறிவு கொண்டவர்கள் பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த மாநிலத்தில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 93.91 சதவீதம் ஆகும். நாட்டிலேயே மிகக் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள் பட்டியலில் பீகார் கடைசி இடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, எழுத்தறிவு கொண்டவர்களை அதிகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் கேரளா, லட்சத்தீவுகள், மிசோரம், திரிபுரா மற்றும் கோவா உள்ளிட்டவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள் பட்டியலில், பீகார், அருணாசல பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 15-வது அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு ஆகும். 1947-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் எழுத்தறிவு கொண்டவர்கள் எண்ணிக்கை 12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

Posted by - July 29, 2023 0
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…

முதலீட்டாளர்களுக்கு இலவசப் பங்குகளை வழங்கும் ரயில்வே நிறுவனம்….. ஜூலை 31ம் தேதி இறுதி முடிவெடுக்கும் RITES

Posted by - July 30, 2024 0
முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்கு மட்டும் இல்லாமல் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவு, இடைக்கால டிவிடெண்ட் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளது.…

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, அகவிலைப்படி உயர்வு.. அதிரடி அறிவிப்பு

Posted by - April 23, 2024 0
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்  பணியாற்றும் அரசுப்பணியாளர்களுக்கு படித்…

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

Posted by - August 7, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில்…

தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்- திருமண ஆசை காட்டி நண்பனை பெண்ணாக மாற்றிய வாலிபர்

Posted by - August 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *