அடடே இதெல்லாம் தெரியாம போச்சே.. சர்வதேச எழுத்தறிவு தினம்.. சுவாரஸ்ய தகவல்கள்

231 0

நமது பிரபஞ்சத்தில் நாம் பிறந்த தினம் தவிர்த்து- பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்று பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் என ஆண்டின் 365 நாட்களில் 10 முதல் 15 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. கொண்டாட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது கிடையாது, என்ற போதிலும் உலகளவில் சிறப்பு தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது இயற்கையாகி விட்டது.

நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும், நமது கவலைகளில் இருந்து ஒருசில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் வகையிலும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், ஆண்டின் 365 நாட்களிலும் ஏதேனும் ஒரு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நம்மில் பலரும் அறிந்து இருப்போம்.செப்.08: இன்று என்ன? - சர்வதேச எழுத்தறிவு தினம் | International Literacy  Day - hindutamil.in

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 26, 1966-ம் ஆண்டு யுனெஸ்கோவின் 14-வது பொதுக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், எழுத்தறிவை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவது உள்ளிட்டவை சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம் ஆகும். இந்தியாவில் எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

2011-ம் ஆண்டு நிலவரப்படி ஏழு வயதுக்கு மேற்பட்டோர், சிறிய தகவலை எழுதவும், படிக்கவும் தெரிந்து இருந்தால் அவர் எழுத்தறிவு பெற்றவராக கருதப்படுவார் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 74.04 சதவீதம் ஆகும். இதில் அதிக எழுத்தறிவு கொண்டவர்கள் பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த மாநிலத்தில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 93.91 சதவீதம் ஆகும். நாட்டிலேயே மிகக் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள் பட்டியலில் பீகார் கடைசி இடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, எழுத்தறிவு கொண்டவர்களை அதிகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் கேரளா, லட்சத்தீவுகள், மிசோரம், திரிபுரா மற்றும் கோவா உள்ளிட்டவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள் பட்டியலில், பீகார், அருணாசல பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 15-வது அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு ஆகும். 1947-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் எழுத்தறிவு கொண்டவர்கள் எண்ணிக்கை 12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - September 7, 2023 0
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை…

வீடுகளுக்குள் 16 பேர் இருக்கும்போதே 3 மாடி கட்டிடத்தை நவீன எந்திரம் மூலம் தூக்கிய உரிமையாளர்

Posted by - June 27, 2023 0
ஐதராபாத்: ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள்…

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களில் 30 பேர் மாயம்: வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் திரும்பி வராத சோகம்

Posted by - August 2, 2023 0
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வன்முறையில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர்…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

Posted by - September 10, 2025 0
சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார். இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *