ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

248 0

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வால்மீன்கள் என்பது தூசி, பாறை மற்றும் பனிக்கட்டிகளால் ஆன சூரிய குடும்பத்தின் உருவாக்கத்தின் போது மீதான பொருட்களின் தொகுப்பு. அவை சில மைல்கள் முதல் பத்து மைல்கள் வரை அகலம் கொண்டவை, பொதுவாக அவை சூரியனுக்கு அருகில் சுற்றும் போது அதிகமாக வெப்பமடைந்து வாயுக்கள் மற்றும் தூசிகளை இழுத்து ஒரு கிரகத்தை விட பெரியதாக இருக்கும்.

சமயங்களில் இந்த வால் மீன்கள் மில்லியன் கணக்கான மைல்கள் நீளத்திற்கு கூட வாலை கொண்டு இருக்கும் வால் நட்சத்திரங்கள் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியிருக்கும் உறைந்த வாயுக்கள், பாறைகள் மற்றும் தூசிகளின் பனிக்கட்டிகள் தொகுப்பு ஆகும். இவை பொதுவாக பூமிக்குள் வரும் போது வளிமண்டல உராய்வு காரணமாக சாம்பல் ஆகும்.ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று  பார்த்தால் ஷாக்! | A comet seen above the Thanjavur Big Temple causes  confusion among the ...

இதனால் அவர் தீ பிடித்து பெரிய வெளிச்சமான தோற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி பலருக்கும் இந்த வால் நட்சத்திரம் கண்ணில் படும். இந்த நிலையில்தான் நேற்று தஞ்சையிலும் இது தென்பட்டது.

தஞ்சாவூர் வால் நட்சத்திரம்: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி நேற்று தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் தோன்றி உள்ளது. பொதுவாக இதை பார்ப்பது பலரும் அபசகுனம் என்று நினைப்பார்கள். அதே சமயம் சில கலாச்சாரங்களில் இதை பார்த்தால் நியாப மறதி ஏற்படும் என்று கூறுவார்கள். இன்னும் சில ஐதீகங்களில்.. இதை பார்த்தால்.. நாம் விரும்பியதை வேண்டிக்கொள்ளலாம். அது பெரிய அளவில் பலன் அளிக்கும்.

நாம் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என்று கூறுவார்கள். இப்படி பல கலாச்சாரங்களில் பல விதமாக இதை பற்றி பேசுவார்கள்.

தமிழ்நாடு சோழர்கள் காலம்: தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் ஒரு சிலர் இடையே இது கெட்ட சகுனமாக பார்க்கப்பட்டது. முக்கியமாக ஆட்சியாளர்களுக்கு கெட்டது என்று பார்க்கப்பட்டது. முக்கியமாக பொன்னியின் செல்வன் படத்தின் கதையே கூட இதன் அடிப்படையில்தான் தொடங்கும். ஆனால் இந்த வால் நட்சத்திரம் கெட்டதா இல்லையா என்பதெல்லாம் இதுவரை நிரூபணம் ஆகவில்லை.

இயற்பியல் நிகழ்வு; அது ஒரு சாதாரண இயற்பியல் நிகழ்வு. சூரியன் உதிப்பது, மறைவது போல் இதுவும் இயற்பியல் நிகழ்வு அவ்வளவே. ஆனாலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் இது தெரிவதுதான் விவாதத்திற்கு அதிக காரணம்.

ஆட்சியாளர்கள்: தஞ்சை பெரிய கோவில் ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு ராசி இல்லாத கோவில் என்பார்கள். அங்கே சென்றால் ஆட்சியாளர்கள் பதவி இழப்பார்கள் என்ற நம்பிக்கை கூட உள்ளது. இப்படிப்பட்ட நிலையத்தில்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் அர்த்தம் என்னவாக என்று பலரும் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.

Related Post

3 பேரின் பதவி பறிப்பு – காரணம் என்ன..?

Posted by - September 30, 2024 0
தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி…

சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை : ஓட்டுநர் கைது!

Posted by - February 18, 2025 0
தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் திருவோணம்…

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

Posted by - October 28, 2024 0
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது…

இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்..பலர் மயக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த விளக்கம்.

Posted by - December 29, 2022 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விடிய விடிய முழக்கமிட்ட ஆசிரியர்களில் பலர்…

ஒரு மாதம் டீ குடிப்பதை தவிர்த்தால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

Posted by - March 15, 2024 0
ஒருவேளை உங்கள் டயட்டிலிருந்து டீயை முற்றிலுமாக நீக்குவதற்கு நீங்கள் முடிவு செய்து இருந்தால், நீங்கள் டீக்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை முயற்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *