சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு?

132 0

முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயார் தயாளு அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சென்னை விரையும் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தாயாரின் உடல்நிலை தொடர்பாக, மருத்துவர்களிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அதோடு, நாகை பயணத்தை முடித்துக்கொண்டு, விரைந்து சென்னை திரும்பியவர் நேரடியாக மருத்துவமனைக்கும் சென்று நலம் விசாரித்துள்ளார். தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனை தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

யார் இந்த தயாளு அம்மாள்?

தயாளு அம்மாள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி ஆவார். இவருக்கு தற்போது 92 வயது என்பது குறிப்பிடத்தக்கது.  கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மு. க. முத்துவை ஈன்றெடுத்த சில ஆண்டுகளில் காலமானார். பின்னர் 1949ஆம் ஆண்டில் கருணாநிதி தயாளு அம்மாளை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி  மு. க. அழகிரி,  மு. க. செல்வி,  மு. க. ஸ்டாலின் மற்றும் மு. க. தமிழரசு என நான்கு பிள்ளைகளை ஈன்றெடுத்தது. திமுகவின் ஆ. ராசா மத்திய அரசில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செயதாக புகார் எழுந்தது.  அந்த வழக்குல் தயாளு அம்மாளையும் சேர்த்து மத்திய புலனாய்வுத் துறை குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

Posted by - October 28, 2024 0
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது…

ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்

Posted by - February 20, 2023 0
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது…

ரூ. 200 கோடி.. பிரம்மாண்ட லுக்.. தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருவது உறுதியானது.. எங்கே தெரியுமா?

Posted by - November 29, 2023 0
சென்னை: இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி…

கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! வானிலை மையம் தகவல்

Posted by - September 9, 2025 0
மயிலாடுதுறை தொடங்கி தேனி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக இருக்கிறது.…

“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ – கடுமையாக விமர்சித்த முதல்வர்

Posted by - June 19, 2025 0
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழடி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடிதத்தின் விவரங்களை காணலாம். திமுக தலைவர் ஸ்டாலின்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *