இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?

169 0

இடைநிலை ஆசிரியர் பணியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆயிரம் பணி இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்படும் என்பதற்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

காலிப் பணியிடங்களை அதிகரிக்கக் கோரிக்கை

கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறாத சூழலில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், 2023- 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது.

2,768 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு

பிறகு இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இந்த அறிவிப்பு ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்மூலம் 2,768 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆயிரம் பணி இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

விடைத் தாள்கள் திருத்தப்படவில்லையா?

எனினும் 2768 இடைநிலை ஆசிரியர்களை  தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும், இன்று வரை விடைத் தாள்கள் திருத்தப்படவில்லை என்றே தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஓர் ஆசிரியர்கூடத்  தேர்வு செய்யப்படவில்லை என்று புகார்க் குரல்கள் எழுந்துள்ளன.

Related Post

“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!

Posted by - January 29, 2025 0
பிரபாகரனிடம் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் இருப்பது வெடிகுண்டு. பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வைத்திருக்கிறேன் எனவும்…

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Posted by - October 8, 2024 0
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில்…

அரசியலிலும் சாதிக்க வேண்டுமென விஜய்க்கு மாணவி அழைப்பு…

Posted by - June 17, 2023 0
#BREAKING | மேடையிலேயே விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த மாணவி மாணவியின் அழைப்பை கடைசி வரை கவனமுடன் கேட்டுக்கொண்ட விஜய் சென்னை, நீலாங்கரையில் மாணவ – மாணவிகளுக்கு…

”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை – திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?

Posted by - December 30, 2024 0
ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசியது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் அறிக்கை: தமிழக வெற்றிக்கழகம்…

மனைவியோடு பிரச்சனையை பேசிய தினேஷ்.. உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டும்.. ரச்சிதா எமோஷனல்

Posted by - November 22, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவி ரச்சிதாவை பிரிந்த கதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *