இன்று தான் கடைசி.!

112 0

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடையவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுகிறதா.? இல்லையா என்பது இன்று மாலைக்குள் முடிவு வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியானது இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டார தகவலாக இருந்து வருகிறது. எனவே கடைசி கட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இதன் படி, கூட்டணி மற்றும் தொகுதிபங்கீட்டை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, கடந்த 2021ஆம் ஆண்டு கூட்டணியில் உள்ள கட்சிகளோடு வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டது.

ஆனால் திடீரென காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவை விமர்சித்தும், தவெகவை உயர்த்தி பேசியும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மேலும் கருத்து கணிப்பு என ஒரு சில சர்வேக்களையும் பதிவிட்டு திமுகவை விமர்சிக்க தொடங்கினர்.

திமுகவிற்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்

இதனால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக தேமுதிகவை கூட்டணியில் இணைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக மறைமுகமாக செக் வைத்தது. இருந்த போதும்   காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும், 2 ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என பட்டியலை கொடுத்துள்ளது. ஆனால் திமுக தரப்போ திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளது. எனவே கடந்த 2021ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகுதிளான 25 மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளது.  மேலும் அதிகபட்சமாக 26 முதல் 28 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இதனையடுத்து ராஜ்யசபா தேர்தலுக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக உள்ளது. எனவே கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுகிறதா.? இல்லையா என்பதை நேற்று மாலைக்குள் அறிவிக்க வேண்டும் என திமுக கெடு விதித்தது. இதனையடுத்து திமுகவை சமாதானம் செய்யும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ள எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக தரப்போ கூடுதல் தொகுதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் தொடருமா காங்கிரஸ்

எனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுகிறதா.? இல்லையா என்பதை இன்று மாலைக்குள் அறிவிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது திமுக. எனவே திமுகவுடன் இன்று காலை காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா.? அல்லது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுமா என்பது இன்று தெரியவரும். எனவே இதனை தமிழக அரசியல் வட்டாரம் மட்டுமில்லாலம் நாடே எதிர்பார்த்து காத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இண்டியா கூட்டிணியில் முக்கிய கட்சியாக திமுக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்,

Related Post

திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு – இது தான் காரணமா.?

Posted by - November 4, 2025 0
சர்ச்சை பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும்…

திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.!

Posted by - February 28, 2026 0
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக…

📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள் அதிகரிப்பு – நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பு என்ன?

Posted by - February 18, 2026 0
📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள், மானியங்கள் – நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? சென்னை:தமிழ்நாட்டில் சமூகநலத் திட்டங்கள் மற்றும் மானிய செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் கடன்…

விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!

Posted by - March 17, 2026 0
ரஜினிகாந்த் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கையில் எடுத்துள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம்…

விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? – எடப்பாடி பேச்சு

Posted by - July 22, 2025 0
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய விஜயின் தவெக மற்றும் சீமான் ஆகியோருக்கு, எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தொண்டர்களை குஷிப்படுத்த ஆட்சியில் பங்கு என, பாஜகவினர் பேசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *