ஈபிஎஸ் vs அண்ணாமலை : உழைக்காமல் தலைவரான ஒரே நபர்.. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர் .. வலுக்கும் வார்த்தைபோர்

214 0

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது.

கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த அண்ணாமலைக்கு கூட்டணியிலிருந்து விலகிய பிறகு அதிமுக கெட்ட கட்சியாகிவிட்டதா எனவும் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டணியில் இருந்து பிரிந்த பின்னர், அதிமுக மற்றும் பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில், தலைவர் பதவிக்கு யாருக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

இதே போல, கூட்டணி விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக சாடிய நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை முதல்முறையாக பொதுவெளியில் உடைத்துள்ளார் அண்ணாமலை… திமுக – பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க, அதற்கும் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.உழைக்காமல் தலைவரான ஒரே நபர், அண்ணாமலைதான் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ள நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அரசியலில் எப்படி செயல்படவேண்டும் என தனக்கு எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்கவேண்டாம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நேரடியாக ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக விமர்சித்திருப்பது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

அமுக்கிரா கிழங்கு.. ஊளைச்சதை முதல் நரம்பு தளர்ச்சிவரை நீக்கும் அமுக்கிரான் கிழங்கு பொடி.. செம மூலிகை

Posted by - January 9, 2024 0
சென்னை: நரம்புகளை பலப்படுத்துவது முதல் முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டுவதுவரை பயன்படக்கூடியது அமுக்கிரா கிழங்கு.. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கிழங்குக்கெனவே தனி இடம் உள்ளது.…

இடைநிலை ஆசிரியர்கள் கைது – கண்டனம் தெரிவித்த தினகரன்

Posted by - February 22, 2024 0
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள்…

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

Posted by - January 10, 2025 0
பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை…

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - December 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

Posted by - March 11, 2024 0
தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..   சொத்துக்குவிப்பு வழக்கில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *