உங்கள் BSNL 4G சிம் கார்டில் VoLTE சேவையை எவ்வாறு செயல்படுத்துவது? இதோ வழிமுறைகள்..

150 0

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதாவது 4ஜி சேவை, 5ஜி சோதனை, லைவ் டிவி சேனல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தவில்லை.அதுவும் 2024 அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவியுள்ளது. அவற்றில் 41,000க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜி சேவை இருக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்இ (VoLTE) சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக வோல்ட்இ சேவையைப் பயன்படுத்தித் தெளிவான வாய்ஸ் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது பிஎஸ்என்எல் பயனர்கள் 4ஜி மற்றும் 5ஜி சிம்மில் வோல்ட்இ சேவையை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைப் பார்க்கலாம். வோல்ட்இ (VoLTE) சேவையை எவ்வாறு செயல்படுத்துவது? நீங்கள் பிஎஸ்என்எல் 4ஜி அல்லது 5ஜி சிம் வைத்திருந்தால் 53733 என்ற எண்ணிற்கு ‘ACTVOLTE’ என்ற மெசேஜ் அனுப்பவும். அவ்வளவு தான் உங்கள் சிம் கார்டில் இந்த வோல்ட்இ தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும். அதேசமயம் இந்த வோல்ட்இ ஆனது பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி சிம் கார்டுகளுடன் மட்டுமே இணக்கமானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒருவேளை நீங்கள் பழைய 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டை பயன்படுத்தி வந்தால், அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று எந்த கட்டணமும் இல்லாமல் 4G அல்லது 5G மேம்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிராய் (TRAI) என்று அறியப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜியோவில் (Jio) இருந்து 79.7 லட்சம் கஸ்டமர்கள் வெளியேறி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து ஏர்டெல் (Airtel) நிறுவனம் 14.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் 15.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் இன்னும் 5ஜி சேவையை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் 8.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்து அதிரடி காட்டியுள்ளது.குறிப்பாக 4ஜி சேவை மற்றும் பல்வேறு புதிய சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்து வருவதால், தொடர்ந்து இந்நிறுவனத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎன்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் 4ஜி தளங்களை அமைப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. குறிப்பாக அனைத்து உபகரணங்களும் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் “பூரண சுதேசி” (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும்.

Related Post

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - February 28, 2023 0
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில்…

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

ஊதிய உயர்வு விவகாரம்: இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

Posted by - December 5, 2025 0
பொருளாதாரம் மற்றும் கல்வியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு ஊதியம் வழங்குவதில் கடைசி இடத்தில் உள்ளது என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட்…

ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!

Posted by - April 9, 2025 0
நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…

ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - February 7, 2024 0
நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *