என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

314 0

சென்னை:

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் பரவியதால் பொருளாதார அளவில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் உலக பெருந்தொற்றாக அறிவித்தது.

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா  தரவு ஆய்வாளர் | Covid Data Analyst says that no new variant in India in  last 30 days - Tamil Oneindia
இந்த பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து அனைத்து தொழில்களுமே முடங்கின. லாக்டவுன், வீட்டிலிருந்தே பணியாற்றுதல் , வேலை இழப்பு, ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற விஷயங்கள் பொதுமக்களின் வாழ்வை புரட்டி போட்டது.

2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கடும் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் 3 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் மீண்டும் பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தினமும் 1, 2 என்ற நிலையில் இருந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 230 பேருக்கு பரவத் தொடங்கிவிட்டது.

பல மாதங்களாக 500 க்கும் குறைவாக இருந்த நிலையில் கேரளாவில் திடீரென ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 1000த்தை தொட போவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்று வருகிறார்கள். அவர்கள் கொரோனாவை தொற்றி வந்துவிடுவார்களோ என்ற அச்சம் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கொரோனா டேட்டா அனலிஸ்ட் விஜயானந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா இந்தியா தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 30 நாட்களாக புதிய வேரியண்ட் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் ஓமிக்ரான் வேரியண்ட்களான (எக்ஸ்பிபி, ஓமிக்ரான், பிஏ 2. 38) உள்ளிட்டவை காணப்படுகின்றன. எனவே பயப்படுவதற்கு எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Post

இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!

Posted by - March 30, 2023 0
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஜித்திடம் இரங்கல் தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி…

தவெக – பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்

Posted by - April 21, 2025 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும்…

கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! வானிலை மையம் தகவல்

Posted by - September 9, 2025 0
மயிலாடுதுறை தொடங்கி தேனி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக இருக்கிறது.…

ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

Posted by - December 26, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வால்மீன்கள்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …

Posted by - February 13, 2024 0
சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *