சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

290 0

Tamil Nadu Budget 2024:

மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பின் கீழ் இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2024-2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை பேரவையில் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தாக்கல் செய்யப்படும் இந்த நிதிநிலை அறிக்கையில், பல புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மையாக சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், சமூக நல திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமத்துவ நோக்கில் மகளிர் நலம் என்ற தலைப்பின் கீழ் மகளிர் நலன் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. பசுமைவழிப் பயணம் என்ற அம்சத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
பட்ஜெட்டின் ஏழாவது அம்சமாக தாய்த் தமிழும், தமிழர் பண்பாடும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக் குறிப்பில், புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடலுக்கு ஏற்ப, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்ட தமிழ்நாடு, எத்திசையிலும் புகழ் பதித்து திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Posted by - October 8, 2024 0
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில்…

நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை…

ICUவில் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்- ஆனாலும் அவர் செய்த வேலை, வாழ்த்தும் மக்கள்

Posted by - December 11, 2023 0
அறந்தாங்கி நிஷா திருமணத்திற்கு பின் ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றால் அவருக்கு துணையாக அவரது கணவர் இருக்கிறார் என்பது தான் உண்மை. அவரது உதவி இல்லாமல் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *