சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

306 0

Tamil Nadu Budget 2024:

மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பின் கீழ் இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2024-2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை பேரவையில் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தாக்கல் செய்யப்படும் இந்த நிதிநிலை அறிக்கையில், பல புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மையாக சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், சமூக நல திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமத்துவ நோக்கில் மகளிர் நலம் என்ற தலைப்பின் கீழ் மகளிர் நலன் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. பசுமைவழிப் பயணம் என்ற அம்சத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
பட்ஜெட்டின் ஏழாவது அம்சமாக தாய்த் தமிழும், தமிழர் பண்பாடும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக் குறிப்பில், புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடலுக்கு ஏற்ப, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்ட தமிழ்நாடு, எத்திசையிலும் புகழ் பதித்து திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி

Posted by - June 30, 2025 0
சிவகங்கையில், அஜித்குமார் என்ற காவலாளி, காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்த விவகாரம் தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சருக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். சிவகங்கையில், காவல்துறை…

வெறும் வேர் போதுமே.. நாடி வருபவருக்கு நலனை மட்டுமே தரும் நன்னாரி.. கல்லீரலின் நண்பன் நன்னாரி வேர்கள்

Posted by - November 25, 2023 0
சென்னை: ஒரு கொடியின் வேர், இலை, பழம் என அனைத்துமே நன்மைகளை வாரி தருகிறது என்றால் அது நன்னாரிதான்.. தலைவலி முதல் பால்வினை நோய் வரை போக்கக்கூடிய…

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…
jamesvasanthan

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

Posted by - April 27, 2026 0
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு…
health 1

வெறும் வயிற்றில் தக்காளி சாறு அருந்துவதால் உங்க உடலில் நடக்கும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

Posted by - December 4, 2023 0
ஒவ்வொரு நாளுமே நமக்கு முக்கியமான நாள்தான். அதனால், தினமும் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க நீங்கள் சாப்பிடும் உணவோடு ஆரோக்கியமான ஒரு மாற்றத்தை வழக்கமாக வேண்டும். ஏனெனில், நீங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *