சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

411 0

Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது.

73 வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கும் ரஜினி46 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக கடந்துள்ளார். 45 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நீடித்து இன்னமும் நாயகனாக நடிக்கும் நடிகன் என்ற பெருமை உலகிலேயே ரஜினிகாந்த்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இப்படி உலகின் தன்னிகரில்லா நடிகனாக விளங்கும் ரஜினிகாந்தின் சாதனைகளையும் திரைப்பயணத்தையும் இந்தத் தொகுப்பில் திரும்பி பார்க்கலாம்.

வசீகரம் என்ற சொல்லிற்கு வாழும் எடுத்துக்காட்டு நடிகர் ரஜினிகாந்த். நான்கு தசாப்தங்களை தாண்டி ஒரு நடிகரால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைக்க முடியும் என்றால் அதனை தமிழ் திரையுலகில் சாத்தியப்படுத்தியது ரஜினிகாந்தின் அபாரமான ஸ்டைல். சிவாஜி ராவாக பெங்களூரில் பஸ் கண்டக்டராக 134ம் நம்பர் பஸ்ஸில் பணியாற்றியபோதே ரஜினிகாந்தின் ஸ்டைல் பெங்களூரு முழுவதும் பிரபலம். பகட்டாக உடை அணிந்து கூட்டநெரிசலில் ரஜினி ஸ்டைலாக டிக்கெட் கிழிக்கும் காட்சியை காணவே கல்லூரி பெண்கள் ரஜினியின் பஸ்ஸில் விரும்பி ஏறுவார்கள் என ரஜினியே மேடைகளில் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் நடத்துனராக பணியாற்றினாலும் நடிகனாக வேண்டும் என்று தீராத வேட்கையில் சென்னைக்கு வந்து திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி ரஜினிகாந்த், பிரபல இயக்குனர் கே பாலசந்தர் மோதிரக்கையால் குட்டப்பட்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது.

முதல் படத்திலேயே ஒரு நடிகரை மூன்று திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்வது அந்நாளில் சாத்தியமில்லாத ஒன்று ஆனால் ரஜினியின் வசீகரத்தை உணர்ந்த கே பாலசந்தர் ரஜினியை மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு என ஒரே நேரத்தில் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார். மூன்று முடிச்சு திரைப்படத்தில் சிகரெட்டை தூக்கிப்போட்டு ரஜினிகாந்த் பிடித்த ஸ்டைல் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. எனினும் பின்னாளில் புகைபிடிக்க வேண்டாம் என ரசிகர்களிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.தமிழ் சினிமாவின் சிறந்த வில்லனாகவும் ஸ்டைல் மன்னனாகவும் வளர்ந்த ரஜினிகாந்திற்கு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான “புவனா ஒரு கேள்விக்குறி” நற்பெயரை பெற்றுத் தந்தது. சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அடையாளம் ரஜினிகாந்திற்கு இந்த திரைப்படத்தின் மூலம் கிடைக்க தமிழின் படு பிசியான நடிகராக மாறிய ரஜினிகாந்த் 1978ஆம் ஆண்டில் மட்டும் 20 திரைப்படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். கலைஞானம் தயாரிப்பில் ரஜினிகாந்த் பைரவி திரைப்படத்தில் நாயகனாக களமிறங்க அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது.

பைரவி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட கலைப்புலி தாணு ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என தலைப்பிட்டு திரைப்படத்தை விளம்பரம் செய்தார். பின்னாட்களில் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் புதிய மைல்கல்லாக உருவானது. ஒரு கட்டம் வரை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்து வந்த நிலையில் இனி தனித்தனியாக திரைப்படங்களில் நடிப்பது என்று முடிவெடுத்தனர். முள்ளும் மலரும், ஜானி போன்ற தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் ஒருகட்டத்தில் முழுக்க வணிக ரீதியிலான கமர்சியல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பாலிவுட்டிலும் புகுந்து பட்டையைக் கிளப்பினார். ஹாலிவுட்டிலும் பிள்ட்ஸ்டோன் மூலம் தடம் பதித்தார். 1990ஆம் ஆண்டுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எஜமான், அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாச்சலம் படையப்பா போன்ற திரைப்படங்கள் வசூலை அள்ள ரஜினிகாந்தின் வர்த்தக எல்லைகள் எகிறின. டான்சிங் மகாராஜ் என்ற பெயரில் ஜப்பானில் வெளியான முத்து திரைப்படம் மாபெரும் வெற்றிபெற அங்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது.

தமிழ் சினிமாவின் முதல் நூறு கோடி, 200 கோடி வசூல் திரைப்படங்கள் என ரஜினியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் இரண்டாவது நடிகர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். தமிழ் சினிமாவில் வேறெந்த நடிகராலும் இனி தொட முடியாத பல உச்சங்களை தொட்டுள்ள ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் தன்னிகர் இல்லா அடையாளம்.

Related Post

மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?

Posted by - March 8, 2025 0
தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம் அறிவித்து ஓராண்டகியும், அதை செயல்படுத்துவது தொடர்பாக இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம்…

நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

Posted by - December 14, 2023 0
சென்னை: பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா? மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய…

5ஆவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்!கண்டுகொள்ளாத தமிழக அரசு…

Posted by - December 30, 2025 0
சம வேலைக்கு சம ஊதியம் கோரி எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு 5-ஆவது நாளாகப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள்.. சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்…

“தாய் மற்றும் மகள்களை ஆபாச வீடியோ எடுத்த கொத்தனார்” – தொடர்ந்து பாலியல் சைகை காட்டி டார்ச்சர்.. கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்!

Posted by - November 22, 2025 0
கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு…

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - December 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *