சென்னையில் 4 லட்சம் பேருக்கு உணவு வினியோகம் தொடருகிறது: மாநகராட்சி ஆணையர் தகவல்

347 0

சென்னை:

சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் மண்டலம் வாரியாக 369 பாயிண்ட்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதை அகற்றி வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு 25 பாயிண்ட் அளவில் மழைநீர் வடிகிறது. எங்களுக்கு சவாலாக உள்ள பகுதியாக பள்ளிக்கரணை, பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதிகள் உள்ளன. CHENNAI: Street to street road side food There is a risk of hotels  closing...! | சென்னை: தெருவுக்கு தெரு முளைக்கும் கையேந்திபவன்கள்...!  ஓட்டல்கள் மூடப்படும் அபாயம்...!

சென்னைக்குள் ராயபுரம், பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, சடையங்குப்பம், கொரட்டூர், பெரம்பூர், ஜமாலியா பகுதிகள் உள்ளன.

சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி எல்லையில் 955 மோட்டார்கள் இயங்கி கொண்டிருக்கிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட 90 மோட்டார்களும் நீரை அப்புறப்படுத்தி வருகின்றன. இதில் அதிக உந்துதிறன் கொண்ட 52 மோட்டார்கள், 100 எச்.பி.மோட்டார்கள், 50 எச்.பி. மோட்டார்களும் இயங்கி கொண்டிருக்கிறது.

தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் ஒரு வேளைக்கு 4 லட்சம் பேர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.

15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 85 சதவீத இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. மற்ற பகுதிகளில் தண்ணீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்க? இந்த பொருளோடு சேர்ந்து குடிச்சா உங்க ஆரோக்கியம் செமையா இருக்குமாம்

Posted by - December 25, 2023 0
கோவிட்-19 வகை JN.1 இன் புதிய திரிபு உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை…

கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!

Posted by - November 13, 2025 0
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி- உதயநிதி பதிவு …

Posted by - November 30, 2022 0
பிறந்த நாள் அன்று என்னை வாழ்த்திய, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியினர், மாற்றுத்திறனாளி தோழர்கள், திருநங்கை-திருநம்பிகள், கலைத்துறையினர், சமூக வலைதள தன்னார்வலர்கள், பத்திரிகை மீடியாவினர்…

“கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்லை… அவர் ஒரு பச்சோந்தி!” – ஈ.பி.எஸ். விமர்சனம்

Posted by - December 9, 2023 0
பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் – எடப்பாடி பழனிசாமி நடிகர் கமல்ஹாசனை அரசியல்வாதியாகவே தான் கருதவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவர்…

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் – ஆவேசமான அமைச்சர்!

Posted by - October 15, 2024 0
ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அமைச்சர் பொன்முடி ஆவேசம் அடைந்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் மாவட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *