trihy

திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?

103 0

Trichy nurse death Investigation report : திருச்சியில் செவிலியர் உயிரிழப்பு விவகாரத்தில் அறுவை சிகிச்சையின் போது தரமற்ற மருந்தை பயன்படுத்தியதே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி செவிலியர் உயிரிழப்பு

திருச்சியில் கடந்த வாரம் செவிலியர் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேட்டு – கலைச்செல்வி தம்பதியினர்  மகள் சீதாலட்சுமி (19). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார். மாணவி சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, செவிலியர் சீதாலட்சுமி திடீரென உயரிழந்தார். மூக்கு அறுவை சிகிச்சைக்கு சென்றவர் திடீரென உயிரிழந்தது சீதாலட்சுமியின் பெற்றோரை மட்டுமில்லாமல் உடன் பணியாற்றிய செவிலியர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

மூக்கு அறுவை சிகிச்சை- செவிலியர் உயிரிழப்பு

இதனையடுத்து தேவைக்கு அதிகமான அளவில் மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்று கூறி மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மாணவி சீதாலட்சுமியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என அவரது பெற்றோர், உறவினர்கள், சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்தது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் விசாரணை குழு அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.

உயிரிழப்பிற்கு காரணம் என்ன.?

குழுவில் இஎன்டி மருத்துவர் பாரதி மோகன் , மயக்கவியல் மருத்துவர் சண்முகசுந்தரம் , மற்றும் மருத்துவர் ஜெயபிரகாஷ் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அறுவை சிகிச்சையின்போது செவிலியர் உயிரிழந்ததற்கு டெக்சாம்மெதாசோன் என்ற தரமற்ற மருந்தே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே (Inj dexamethasone) குறிப்பிட்ட பேட்ச் மருந்து சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் குறிப்பிட்ட பேட்ச் மருந்துகள் நிறுத்தப்பட்டு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

தி.மலையில் 7 உயிரை காவு வாங்கிய சோகம் – திக் திக் நொடிகள்.. நடந்தது என்ன?

Posted by - December 3, 2024 0
இந்நிலையில் நேற்று காலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக இறங்கினர். அவ்வப்போது…

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

Posted by - September 16, 2025 0
மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர் கர்ப்பிணி மனைவியை அரிவாளால் வெட்டிய கும்பல்! சென்னை அம்பத்தூர் அருகே மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர், அவரது கர்ப்பிணி…

பொன்முடிக்கு கடைசி வாய்ப்பு? இன்று மாறும் அமைச்சரவை? கூட்டத்தில் ஸ்டாலின் முக்கிய முடிவு

Posted by - April 17, 2025 0
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. அமைச்சரவைக்…

அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்

Posted by - April 6, 2023 0
சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.…
Generated Image November 13 2025 5 06PM

நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Posted by - November 13, 2025 0
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50.000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *