தவெக மாநாட்டு திடலில் எதற்கு இத்தனை தலைவர்களின் பேனர்.. தெளிவில்லாத அரசியல் பாதையில் பயணிக்கிறாரா தளபதி?

143 0

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக அரசியல் தலைவர்களின் பார்வையும் கடந்த சில தினங்களாக தளபதியின் மீதுதான் இருக்கிறது. மாநாட்டை எப்படி நடத்தப் போகிறார், மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என்பதுதான் இப்போதைக்கு பெரிய எதிர்பார்ப்பு.நடிகர் விஜயும் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் சின்ன ஒரு தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு நடந்து கொண்டிருக்கும் முன்னேற்பாடுகளை பார்க்கும் போதே எந்த அளவுக்கு தரமாக ஸ்கெட்ச் போட்டு விஜய் அரசியலுக்குள் நுழைந்து இருக்கிறார் என்பது தெரிகிறது.கடந்த சில தினங்களாக மாநாட்டு திடலில் நிறைய அரசியல் தலைவர்களின் பேனர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேனர்களும் வைக்கப்படுகிறது. பொதுவாக ஒரு கட்சி மாநாடு என்றால் அந்த கட்சியை உருவாக்கியவர் அவர் பின்னால் அதை வழி கொண்டு நடத்தி வருபவர்கள் இவர்களுடைய புகைப்படங்கள் தான் இடம் பெறும்.

தெளிவில்லாத அரசியல் பாதையில் பயணிக்கிறாரா தளபதி?

அப்படி பார்த்தால் தமிழக வெற்றிக்கழகம் மாநாடு நடக்கும் திடலில் தலைவர் விஜய் பேனர் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கே பெரியார், அம்பேத்கார், காமராஜர், அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் என நாளுக்கு நாள் பேனர் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

போதாத குறைக்க நேற்று தலையின் ரசிகன், தளபதியின் தொண்டன் என்ற பெயரில் அஜித்தும் அந்த பேனர் கூட்டத்தில் இணைந்து இருக்கிறார். மக்களுக்கு இந்த பேனர்கள் ஒருவித குழப்பத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திராவிட அரசியல், திராவிடத்தை எதிர்க்கும் அரசியல், தன்னுடைய ஜாதி மக்களுக்காக போராட களமிறங்கும் அரசியல் கட்சிகள் தான் இருக்கிறது. ஆனால் இது எல்லாம் சேர்ந்த கலவையாக விஜய் தன்னை முன்னிறுத்துகிறார்.

திராவிட அரசியல் வேண்டுமா பெரியார் இருக்கிறார், தேசியம் வேண்டுமா காமராஜர் இருக்கிறார், தலித் அரசியல் வேண்டுமா அம்பேத்கர் இருக்கிறார், வன்னியர் அரசியல் வேண்டுமா அஞ்சலை அம்மாள் இருக்கிறார், முக்குலத்தோருக்கு வேலுநாச்சியார் இருக்கிறார் என  வாரிசு

போதாத குறைக்கு மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் இந்த மாநாட்டு திடலில் பேனர் வைப்பது, சமூக வலைத்தளத்தில் அரசியல் என்று வந்துவிட்டால் விஜய்க்கு தான் ஆதரவு என பேசுவது எல்லாமே விஜய் தரப்பில் இருந்து நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தெளிவான அரசியல் பாதையை நோக்கி விஜய் பயணிக்கிறாரா என்பது அவருடைய முதல் மாநாட்டு பேச்சில் தான் தெரியும்.

பட சமயத்தில் தில்ராஜ் பேசிய வசனம் தான் ஞாபகம் வருகிறது.

Related Post

உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

Posted by - April 25, 2024 0
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே…

1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

Posted by - December 26, 2024 0
சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க…

தக்காளி விலையுடன் போட்டி போடும் சின்ன வெங்காயம்- கோவையில் கிலோ ரூ.180-க்கு விற்பனை

Posted by - July 10, 2023 0
கோவை: கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட…

மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு: 4 மாவட்டங்களுக்கு மின்வாரியம் புதிய அறிவிப்பு

Posted by - December 14, 2023 0
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக…

பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!

Posted by - November 21, 2025 0
தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது என்று கூறி மீண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *