திமுகவின் ஊழல் மறைப்பு கூட்டம் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

189 0

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்கான இன்று திமுக கூட்டம்  நடத்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் இல்லம் முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக முதலவருக்கு கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளதாகவும், தமிழகத்தை காப்பாற்ற போவது தாமரைக்கொடி தான் என்றும் கூறினார்.

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,  இந்த அரசு எல்லா விதத்திலும் தோல்விடயுடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் அமிஷா தொகுதி மறு வரையறையினால் தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது  என தெரிவித்துள்ளதாகவும்,  தமிழக முதல்வர் தோல்வியை மறைப்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும் கூறினார். தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறுவதாகவும் தமிழிசை கூறினார்.

காவிரி, மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரத்திற்கு இதுபோன்ற கூட்டம் நடத்தப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Post

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

Posted by - October 8, 2025 0
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விடுதலை…

அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்..

Posted by - July 1, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க கட்சிகளுடன் சேர்ந்து…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேருடன் மிதந்த மதுரை…!

Posted by - May 3, 2023 0
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு…

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் – புகைப்படங்கள்!

Posted by - January 27, 2023 0
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…

“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

Posted by - December 14, 2022 0
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *