திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

244 0

வான் சாகச நிகழ்வை காண சென்ற 5 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது குறித்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லாமல் திமுக அரசு இருந்ததாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு செய்யாதது, அவரது நிர்வாக தோல்வியைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.

5 உயிர்களை இழந்திருப்பதை ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது எனவும், இதற்கு திமுக அரசே முழு பொறுப்பு எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்களின் உயிர் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் திமுக அரசை கண்டிப்பதாகவும்,

பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

சவுமியா அன்புமணி வெற்றிக்காக உழைக்கும் மகள்கள்!

Posted by - April 10, 2024 0
தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் அம்மாவுக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல் மகளான…

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

பருவமழை தீவிரம்… மழை நிலவரங்களை கண்காணித்து வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம்

Posted by - November 30, 2023 0
சென்னை: இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து…

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *