துணிவு இருந்தால்… – அஜித் படத்துக்கு ஆதரவாக மாறிய கருணாநிதி ட்வீட்- கொண்டாடும் ரசிகர்கள்

253 0

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்

துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கட் அவுட் வைப்பது, பாதையாத்திரை செல்வது என வித்தியாசமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கில் ஒரிஜினல் பணம் நோட்டு போல் டிக்கெட்ட அச்சிடப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது. மற்றொரு பக்கம் விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனம் முடிவெடுத்துள்ளன. இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என வெவ்வேறு நேரங்களில் முதல் காட்சிகள் திரையிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர். அந்த ட்வீட்டில் ”துணிவு இருந்தால் துக்கம் இல்லை. துணிவு இல்லாதவனுக்கு, தூக்கம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். துணிவு குறித்து கருணாநிதி பதிவிட்டுள்ளதால் துணிவு படத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக அஜித்தின் படங்கள் பெரிய புரமோஷன்கள் இல்லாமலே வெளியாகின. ஆனால் துபாயில் வானத்தில் போஸ்டர் பறக்கவிடப்பட்டது என இந்த முறை புரமோஷன்களில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றனர் துணிவு படக்குழு. காரணம் வாரிசுடன் துணிவு வெளியாவதுதான் எனக் கூறப்படுகிறது.

Related Post

வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகுது கனமழை!

Posted by - November 14, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆங்காங்கே விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த…

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

Posted by - October 28, 2024 0
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது…

அரையாண்டு லீவ் முடிந்தது..! தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

Posted by - January 2, 2023 0
6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு. அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு கடந்த 15ஆம்…

நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

Posted by - September 20, 2023 0
தர்மபுரி: தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு,…

அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி

Posted by - February 6, 2026 0
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 426 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப் பிரிவுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிப்ரவரி 9ஆம் தேதி வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *