துபாயில் வீடா, கார் ரேஸ் எனக்கா? – கொந்தளித்து பேசிய நிவேதா பெத்துராஜ்

225 0

தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் கார் பந்தயம் நடத்த நான் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், யூடியுபர் ஒருவர், அண்மையில் நிவேதா பெத்துராஜ் குறித்து அவதூறாக பேட்டியளித்திருந்தார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எக்ஸ் தளத்தில் நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக பொய் பேசுவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்யும் முன்பு அந்த தகவலை சரிபார்ப்பார்கள் என நினைத்து அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் தனது குடும்பம் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திரையுலகிலும் தனக்கு பட வாய்ப்புகளை தரும்படியோ யாரிடமும் கேட்டதில்லை என்றும், தான் எப்போதும் பணத்திற்காக பேராசை கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.2013 ஆம் ஆண்டு முதல் கார் பந்தயம் தனது விருப்பமாக இருப்பதாக கூறியுள்ள நிவேதா, உண்மையில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்பட இருப்பது குறித்தும் தனக்கு தெரியாது என விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

உடனே விண்ணப்பிங்க!

Posted by - August 6, 2025 0
அரசு வெளியிட்ட தகவலின்படி, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 29, 2025-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். சென்னை: தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள…

ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!

Posted by - April 9, 2025 0
நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில்…

தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை – நூதன போராட்டம்!

Posted by - December 27, 2024 0
“எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன்.” தமிழக…

அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? – சாடிய உயர்நீதிமன்றம்

Posted by - April 18, 2025 0
பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *