நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

343 0

சென்னை:

பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா?

மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய நிலக்கடலை.. இந்த நிலக்கடலையின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ரத்த நாளங்களை நிலக்கடலை பாதுகாக்கிறது.. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.. ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த கடலை கட்டுப்படுத்துகிறது..

நிலக்கடலை:

முதுமை தோற்றத்தை நீக்கி, இளமையை தக்கவைக்கிறது இந்த நிலக்கடலை. இதற்கு காரணம், வைட்டமின் C, E இரண்டுமே கடலையில் உள்ளதால், சருமத்துக்கு கவசம்போல பாதுகாக்கிறது.வேர்க்கடலை.. வறுத்த வேர்க்கடலை + பச்சை வேர்க்கடலை.. அடடா இது தெரியாம  போச்சே.. நோட் பண்ணுங்க மக்களே | Do you know the Health Benefits of Peanuts  and Ground Nut is the Best ...

சருமத்திலுள்ள காயங்களையும் குணப்படுத்தும் திறன் இந்த கடலைக்கு உள்ளது. . தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. எலும்புகள் தேய்மான பிரச்சனை இருப்பவர்கள், கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு நிலக்கடலை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

நரம்பு மண்டலம்:

மாங்கனீசு, பாஸ்பரஸ், வைட்டமின் B1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுகிறது… ஞாபக சக்தியையும் பெருக்குகிறது.. புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சக்தி இந்த நிலக்கடலைக்கு இருக்கிறது. இத்தனை நன்மைகள் இருந்தாலும், இந்த நிலக்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களும், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும், நிலக்கடலையை குறைத்து கொள்ள வேண்டும்.. அலர்ஜி பிரச்சனை முதல் சுவாசம் பிரச்சனை வரை வரலாம்.. சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் நல்லது.

யாரெல்லாம் தவிர்க்கலாம்:

சிலவகையான நோய்களில், நிலக்கடலையை சாப்பிட்டால், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, நோயாளியின் பிரச்சினைகளை இன்னும் அதிகரிக்க செய்துவிடுமாம்.. ஒருவேளை உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால், நிலக்கடலையை தவிர்த்துவிடலாம்.. இதனால், உடலில் அரிப்பு, வீக்கம், குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நிலக்கடலையை அதிகம் சாப்பிடக்கூடாது.. காரணம், இந்த நிலக்கடலையில் நிறைய சோடியம் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தை இன்னும் அதிகரிக்க செய்துவிடும்.. இதனால் இதயம் தொடர்பான நோய்களும் உருவாகிவிடும்.. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிலக்கடலையை அதிகமாக சாப்பிடக்கூடாது. அதேபோல, ஓவர் வெயிட் இருப்பவர்களும் நிலக்கடலையை அதிகம் சாப்பிடக்கூடாது.. நிறைய கலோரிகளும், கொழுப்புகளும் உள்ளதால், உடல் எடை மேலும் அதிகரித்துவிடும்.. மூட்டு வலி உள்ளவர்களும் நிலக்கடலையை தவிர்த்துவிட வேண்டும். அசிடிட்டி பிரச்சனை இருந்தாலும், நிலக்கடலையை தவிர்க்கலாம்..

ஊறவைத்த நிலக்கடலை:

எப்போதுமே நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி சாப்பிட சொல்கிறார்கள். இதனால், பித்தம் உடலில் அதிகம் சேராது.. அல்லது வேர்க்கடலையை கஞ்சியாக அல்லது வாழைப்பழம், தேன் சேர்த்து சாப்பிடுவதால், கூடுதல் பலம் கிடைக்கும். வறுத்த வேர்க்கடலையைவிட அவித்த நிலக்கடலை மிகவும் நல்லது.

Related Post

மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம்

Posted by - February 20, 2023 0
மயில்சாமி மறைவு மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம் நடிகர் மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள்…

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

Posted by - December 15, 2023 0
சென்னை: தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு…

வெயில் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் : எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்..!

Posted by - April 22, 2023 0
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேரடி வெயிலில் செல்வது அசௌகரித்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…

அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – டிடிவி தினகரன்

Posted by - May 20, 2024 0
கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் திருப்பூர், கரூரில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *