பழைய உணவு பொருட்களை பயன்படுத்துவதால் விஷமாக மாறும் “சவர்மா”

299 0

அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் ‘சவர்மா’ என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

சிக்கன், முட்டைகோஸ், வெங்காயம், மிளகாய்தூள் மற்றும் பல்வேறு உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கும் ‘சவர்மா’ வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவற்றில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் கெட்டு போகாமல் இருந்தால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி செய்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுகின்றன. வீட்டிலேயே ஈஸியா சிக்கன் சவர்மா செய்யலாம்… இதோ ரெசிபி!சில நேரத்தில் உயிர் பலியும் ஏற்பட்டு விடுகிறது. கேரள மாநிலத்தில் சமீபத்தில் ‘சவர்மா’ சாப்பிட்ட சிறிது நேரத்தில் பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.

தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக ‘சவர்மா’ இருக்கிறது. மாநில தலைநகரான சென்னையில் பலர் விரும்பி சாப்பிடும் உணவாக ‘சவர்மா’ உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் ‘சவர்மா’ சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். அவர் உணவு விஷமாகியதின் காரணமாக இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் பல கடைகளில் இருந்து பழைய உணவு பொருட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றினர். சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன. சில பாக்டீரியாக்கள் 72 மணி நேரத்திற்கு பிறகு வேலை செய்கிறது. விஷமாகும் உணவு குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கின்றன. பாதிப்பு தீவிரமடைந்த உடன் அது மற்ற உறுப்புகளை பாதிக்கிறது.

‘சவர்மா’வை பொறுத்தவரை பழைய உணவு பொருட்கள் மற்றும் கெட்டுப்போன இறைச்சியோ மற்றும் ஏற்கனவே தயாரித்த உணவை குளிர்ச்சி அடைய செய்து விட்டு மீண்டும் சூடுப்படுத்தி பயன்படுத்தாமல் இருந்தால் பயப்பட வேண்டியதில்லை என்று உணவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Post

“நைட்டி”.. மனித நுரையீரலை மசாலா தடவி சாப்பிட்டாராம்.. கல்லீரலை கூட விடல.. வெறிபிடித்த “ஹோமோ” டாக்டர்

Posted by - November 25, 2023 0
தஞ்சாவூர்: கும்பகோணம் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி செய்த காரியத்தை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் தஞ்சை போலீசார். அவரது வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள் கிடைத்து…
dgp

Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?

Posted by - May 29, 2026 0
Tamil Nadu New DGP Mahesh Kumar IPS: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார்.…
milk

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்றனர்

Posted by - December 6, 2023 0
சென்னை: ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது.…

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

Posted by - November 18, 2023 0
சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும்,…

அரசியலிலும் சாதிக்க வேண்டுமென விஜய்க்கு மாணவி அழைப்பு…

Posted by - June 17, 2023 0
#BREAKING | மேடையிலேயே விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த மாணவி மாணவியின் அழைப்பை கடைசி வரை கவனமுடன் கேட்டுக்கொண்ட விஜய் சென்னை, நீலாங்கரையில் மாணவ – மாணவிகளுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *