பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக?

143 0

தமிழ்நாட்டின் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்றை வாங்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். திமுக, அதிமுக என அரைநூற்றாண்டுகளைக் கடந்து இரு கட்சிகளுக்கும் போட்டியாக தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது.

நெருங்கும் தேர்தல்:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், கடந்தாண்டு பிற்பாதி முதலே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், கரூர் சம்பவம் தவெக-வை மிக கடுமையாக பாதித்தது. செங்கோட்டையன் வருகைக்கு பிறகு விஜய்யின் அரசியல் பயணம் தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் ஜனநாயகன் சிக்கலில் சிக்கி அமைதியாகவே உள்ளார்.

தொலைக்காட்சி தொடங்கும் தவெக:

ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தங்களுக்கு என்று தொலைக்காட்சிகள் வைத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தங்களுக்கு சாதகமாக செயல்பட தொலைக்காட்சியை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதியதாக தொலைக்காட்சி தொடங்க உரிமம் வாங்குவது உள்பட பல சவால்கள் இருப்பதால், ஏற்கனவே இயங்கி வரும் தொலைக்காட்சியை வாங்க தவெக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக, தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பழமையான ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சியை வாங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 3 முறை நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கட்டுப்படியாகாத விலை:

ஆனால், அந்த நிறுவனம் கூறிய விலை தவெக எதிர்பார்த்த தொகையை காட்டிலும் அதிகளவு இருப்பதால் அந்த தொலைக்காட்சியை வாங்குவதில் இழுபறியாக உள்ளது. மேலும்,  மற்றொரு தொலைக்காட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ள மறுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அந்த தொலைக்காட்சியை கைப்பற்ற தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

விரைவில் அறிவிப்பு:

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில்,  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும், அக்கட்சியின் நிர்வாகிகளும் முக்கிய விவகாரங்களில் வாயைத் திறக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர்.

தங்களுக்கு சாதகமாக ஒரு தொலைக்காட்சி செயல்பட்டால் அது தவெக-வின் குரலாக ஒலிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர். தொலைக்காட்சியின் விலை தவெக எதிர்பார்த்த தொகைக்கு வந்தால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வம்:

தற்போது வரை விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் ஆதரவாக எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல, திமுக – அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இணையத்தில் தொடர் மோதல் வெடித்து வருகிறது. ஆனால், தங்களுக்கு என்று அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி இருந்தால் சாமானிய மக்களைச் சென்றடைவது இன்னும் எளிதாக இருக்கும் என்பதால் இந்த தொலைக்காட்சியை விரைவில் தொடங்க தவெக ஆர்வம் காட்டி வருகிறது.

 

Related Post

வந்தவர்கள் வளமாக… வளர்த்தவர்கள் ஓரமாக! – கோவை திமுகவில் கோஷ்டி சேர்க்கிறாரா செந்தில் பாலாஜி?

Posted by - August 20, 2025 0
2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும்…

பாமக-வில் பறிபோகும் அன்புமணி பதவி? அதிகாரத்தை இவரிடமா தரப்போகிறார் ராமதாஸ்?

Posted by - August 12, 2025 0
ராமதாஸ் தலைமையில் வரும் 17ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக பல முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில்…

பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?

Posted by - April 3, 2026 0
பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன? தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில்,…

மதுரை மாநாட்டிலாவது திருந்துவாரா விஜய்? பவுன்சர்கள் ஒகே.. ஆனா ரவுண்ட்ஸ் எப்போ? தவெக சம்பவம் செய்யுமா?

Posted by - August 21, 2025 0
மதுரை மாநாட்டின் மூலமாவது தவெக தலைவர் விஜய் தீவிர அரசியலை முன்னெடுப்பாரா? என அவரது கட்சி தொண்டர்களே ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மதுரை மாநாட்டில் விஜய் தனது மாநிலம்…

ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

Posted by - February 20, 2026 0
சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *