புஸ்ஸி ஆனந்த் இல்ல, விஜய்க்கு அரசியல் நகர்வை வகுத்து கொடுக்கும் பெரிய புள்ளி.. யாரு சாமி இவரு?

172 0

விஜயின் அரசியல் பயணத்தை பரந்தூருக்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். முதல் அரசியல் மாநாடு சாதாரணமான நடிகருக்கு கூடிய கூட்டம் என சொல்லி முடித்து விட்டார்கள்.

ஆனால் விஜய் பரந்தூரில் பேசிய ஒவ்வொரு விஷயமும் தமிழக மக்களை யோசிக்க வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழக வெற்றி கழகம் கட்சியை பொறுத்த வரைக்கும் எல்லாமே புஸ்ஸி ஆனந்த் என்றுதான் வெளியில் தெரிகிறது.

கடைசியாய் நடந்த நிர்வாகிகள் மீட்டிங்கில் ஆனந்தை விஜய் வெளியே அனுப்பிவிட்டு நிர்வாகிகளிடம் பேசினார்.

ஜான் ஆரோக்கியசாமி

என்னப்பா நடக்குது கட்சியில் என எல்லோருக்குமே சந்தேகம் வந்தது. அப்போது வெளியே வந்த பெயர் தான் ஜான் ஆரோக்கியசாமி. இவர்தான் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் ஆலோசகர்.

ஜான் ஆரோக்கியசாமி வெளிநாடுகளில் பல உயரிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பாமகவின் அரசியல் பிரச்சாரம் பெரிய அளவில் வைரலானது.

அன்புமணிக்கு முதலமைச்சராகும் தகுதி இருப்பதாக கூட மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு பின்னால் இருந்தவர் ஜான் ஆரோக்கியசாமி தான்.

அது மட்டும் இல்லாமல் மகாராஷ்டிராவில் சரத் பவாருக்கு அரசியல் வியூகம் வகுத்துக் கொடுத்தவரும் இவர்தான். இன்று திமுகவுக்கு எங்கே அடிச்சா வலிக்கும் என சரியாக புரிந்து கொண்டு காய் நகர்த்துகிறார்.

விஜயின் முதல் அரசியல் பயணமான பரந்தூர் பயணமே அரசியல்வாதிகளை விக்கி திக்க வைத்ததற்கு காரணம் இந்த ஜான் ஆரோக்கியசாமி தான்.

Related Post

சென்னையில் வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு வைத்ததால் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 10, 2024 0
சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை…

நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியர் உயிரோடு எரித்து கொலை- கணவர் போலீசில் சரண்

Posted by - May 5, 2023 0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி…

ஆதார் போன்று ’மக்கள் ஐடி’ உருவாக்க தமிழக அரசு திட்டம்..!

Posted by - December 28, 2022 0
Makkal ID: ஆதார் போல தமிழக மக்களுக்கு தனி ஐடி உருவாக்க தமிழ்நாடு மின் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆதார் எண் போன்று மக்கள் ஐடியை…

14,121 உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் – கலெக்டர் தகவல்

Posted by - November 15, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில்…

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்டு காரணம் சொன்ன சத்யராஜ் மகள்!

Posted by - January 19, 2025 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *