பொதுச்செயலாளரான எடப்பாடி… இனிப்பு வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!!

204 0

பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார்.  மாநகராட்சி பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தென் சென்னைக்கு நிகராக வட சென்னையை மாற்றும் பணி 8 கால் வேகத்தில் நடைபெறும்.

அயனாவரம் சோலை அம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை அமைச்சர் சேகர்பாபு, வெற்றி அழகன்  எம்.எல்.ஏ உள்ளிட்டோர்  திறந்து வைத்தனர்.  ரூபாய் 75.41 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்கள், நடைமேடைகள், அமரும் கல் நாற்காலி தேகப் பயிற்சி மேற்கொள்ளும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பூங்காவை திறந்து வைத்த பின்னர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்ட அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,

அனைத்து மாநகராட்சி பூங்காக்களையும் அழகுப்படுத்தும் நோக்கில் இன்றைய அரசு செயல்பட்டு வருவதாகவும், பூங்காக்களில் நடைபாதை விளையாட்டு மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர் அனைத்து பயன்பாடுகளும் உடைய இது போன்ற பூங்காக்கள் அமைவது மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சர் மு.க

ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார் என்றும் தென் சென்னைக்கு ஈடாக வட சென்னையை மாற்றும் பணியில் முழுவீச்சில் எட்டு கால் பாய்ச்சலில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கழிவுநீர், சாலை வசதி, போக்குவரத்து நெரிசல் உட்பட அடிப்படை வசதிகள் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், கொரோனா தொற்று மழை வெள்ளம் போன்ற காரணத்தினால் பணிகள் தாமதம் ஆகியிருக்கிறது விரைவில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளரானதைக் குறித்த கேள்விக்கு முதலில் எவ்வித பதிலும் அளிக்காமல் சென்ற அமைச்சர் சேகர் பாபு திரும்பி வந்து அது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு லட்டு கொடுத்து சென்றார்.  அமைச்சரின் இச்செயல் அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Post

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - November 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

Posted by - February 21, 2025 0
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல்…

Christmas 2025: இந்தியா முழுவதும் கொண்டாட்ட வேகம்… சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஸ்பெஷல் Events!

Posted by - December 12, 2025 0
சென்னை: உலகம் முழுவதும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் Christmas 2025 கொண்டாட்டங்கள் பெரிய கொண்டாட்டத்தோடு இன்று ஆரம்பமானது. தமிழ் நாடு முழுவதும் தேவாலயங்கள், மால்கள், கடைகள், சுற்றுலா…

வீட்டிற்கு வராத கதிர் ஆனந்த்.. லாக்கரை உடைக்க கடப்பாறை; வேலூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

Posted by - January 4, 2025 0
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக…

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!

Posted by - July 13, 2024 0
 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *