eeeeeeeeeeeeeee

போராடும் ஆசிரியர்கள் மீது **ஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!

108 0

எக்மோர் ரயில் நிலையம் முன்பு என்னைப் பின்தொடர்ந்து கிட்டத்தட்ட 25 காவலர்கள் மற்றும் 4 சீருடை இல்லாத காவல் துறையினர், என்னைச் சுற்றி வளைத்தனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 18ஆம் நாளாகப் போராடி வருகின்றனர். எனினும் இந்தப் போராட்டத்துக்கு அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களைக் காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்து வருகிறது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டால் கஞ்சா வழக்குப் பதிவு செய்வோம் என்று காவல்துறை மிரட்டியதாக, ஆசிரியர் ஒருவரின் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக வெளியான ஆடியோ பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

’’நேற்று காலை 9.45 முதல் மாலை 7.00 மணி வரை முழுவதும் காவல்துறை patrol வாகனத்தில் வைத்திருந்தார்கள்.

எக்மோர் ரயில் நிலையம் முன்பு என்னைப் பின்தொடர்ந்து கிட்டத்தட்ட 25 காவலர்கள் மற்றும் 4 சீருடை இல்லாத காவல் துறையினர், என்னைச் சுற்றி வளைத்தனர்.

அவர்கள் முதலில், ’’நீங்கள் வாத்தியார்தானே’’ என கேட்டனர்.

’’இல்லை’’ என்று சொன்னேன்.

அதில் ஒருவர், ‘’நேற்று இவர் போராட்டத்தில் கோஷம் போடும்போது வாகனத்தில் இவரை தூக்கிப் போட்டேன்’’ என்று கூறினார்.

பின்னர் அவர்கள் 9.45- 11.30 வரை சுமார் 2 மணி நேரம் 15 நிமிடமாக எழுப்பிய வினாக்கள்.

பெயரைக் கேட்டனர்.

குணசேகர் என்றேன்.

’’முகநூலில் திமுகவை மிசா என்று குறிப்பிட்டது நீதானே’’ என்று கேட்டனர், இல்லை என்றேன்.

1. உங்களை யார் வழி நடத்துகிறார்கள்?

2. ஃபெலிக்ஸ்க்கு கால் செய்?

3. செல்போனில் லாக்கை எடு.

4. இன்று எங்கு போராட்டம்?

அனைத்துக்கும் நான் கூறிய ஒரே விடை தெரியாது.

’’உன் பையில் **ஞ்சாவை வைத்து வழக்குப்பதிவு செய்வோம், உன் வாழ்க்கையே போய்விடும்’’ என்று கூறினார்கள். நான் சிரித்துக் கொண்டே, ’’தாராளமாக செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறினேன். கடுமையான கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்.

எதற்காக போராடுகிறாய் என்று கேட்டார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்றேன், அங்கிருந்து ஒரு ஆட்டோ டிரைவரை கூப்பிட்டு உனக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டார்கள். அவர் ஒரு நாளைக்கு 1200 என்று கூறினார். நான் கேட்டேன்.. ஆட்டோ டிரைவரும் நானும் ஒன்றா?’’ என்று.

திரும்பத் திரும்ப மொபைல் லாக்கை எடுக்க சொல்லினார்கள். ’’என் கொள்கைக்கு மாறாகவும் என் இனத்திற்கு துரோகமும் செய்ய மாட்டேன்’’ என்றேன். கடும் சொற்களைப் பயன்படுத்தி என்ன கொள்கை என்று கூறினார்கள்.

பின்னர் வாகனத்திற்குள் ஏற்றினார்கள். இருபுறமும் இரண்டு IS ஏறி மொபைலை லாக் எடுக்க கூறினார்கள், முடியாது என்றேன். ஒரு மணி நேரம் போராடினார்கள். பின்னர் என் கையைப் பிடித்து ஒவ்வொரு விரலாக பத்து விரலையும் தொட்டுப் பார்த்தார்கள். லாக் ஓபன் ஆகவில்லை. கடுமையான சொற்களைப் பயன்படுத்தி திட்டினார்கள், சில பேர் அன்பாக பேசி, பின் எண்ணைக் கேட்டார்கள். எதற்கும் நான் செவிமடுக்கவில்லை.

11.30 ஆனவுடன் எங்களுக்குப் போராட்டம் களம் அவர்களுக்கு  ஊடகங்கள் மூலம் தெரிந்து விட்டது. பின்னர் என்னை தொந்தரவு செய்யவில்லை.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது

  1. நம் போராட்டம் அரசுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்துள்ளது.
  2. யார் எப்படி திட்டமிடுகிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
  3. உளவுத்துறை சாதாரண ஆசிரியரிடம் கூட போன் லாக்கை எடுக்க முடியவில்லை. நாம் நாம் எவ்வளவு மன உறுதியோடு உள்ளோம் என்று அவர்களுக்கு காட்டியுள்ளோம்.
  4. எத்தனை வழக்கு பதிவு செய்தாலும் அடக்குமுறை நடத்தினாலும் இவர்கள் அஞ்ச மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரிய வைத்துள்ளோம்.
  5. தலைமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் போராட துணிந்து விட்டார்கள் என்று அறிந்து விட்டார்கள்.
  6. உளவுத்துறை கடுமையான தோல்வி
  7. முகநூல் பதிவு, ட்விட்டர் பதிவு, புலனப்பதிவு அனைத்தையும் கண்காணிக்கிறார்கள்.

ஆகவே நம் போராட்டம் வெற்றியை நோக்கி பயணிக்கின்றது’’.

இவ்வாறு அந்த ஆடியோ நீளும் நிலையில், இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

Related Post

“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ – கடுமையாக விமர்சித்த முதல்வர்

Posted by - June 19, 2025 0
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழடி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடிதத்தின் விவரங்களை காணலாம். திமுக தலைவர் ஸ்டாலின்,…

அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம்: தவறான சிகிச்சை என கணவர் குற்றச்சாட்டு

Posted by - September 28, 2023 0
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார்…

ஒரே “பட்டை” போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை.. பெஸ்ட் “வலி நிவாரணி” பவுடர்

Posted by - December 30, 2023 0
சென்னை: முருங்கை மரத்தை போலவே, வேப்ப மரத்தை போலவே, தவிர்க்கவே முடியாதது ஆலமரம்.. இந்த மரத்தின் மொத்த பாகங்களுமே நன்மைகளை தரக்கூடியது.. அந்தவகையில், ஆலமரத்தின் பட்டைகளின் ஒருசில…
Generated Image November 22 2025 5 51PM

“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

Posted by - November 22, 2025 0
புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை…

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - January 21, 2023 0
தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *