அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்

231 0

மதுரையில் காவலர் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மதுரையில் துப்பாக்கிச் சூடு:

மதுரை ஈச்சனேரியை  சேர்ந்த தனிப்படை காவலர் மலையரசனின் உடல் எரிந்த நிலையில் கடந்த 19ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்த போலீசார், மூவேந்திரன் என்பவரை சுட்டுப் பிடித்தனர். இதையடுத்து அவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுற்றி வளைத்தபோது  சார்பு ஆய்வாளர் மாரி கண்ணனை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் தனது ஆட்டோவில் பயணித்த மலையரசனிடம் இருந்த பணத்திற்காக, அவரை மூவேந்திரன் கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பணத்திற்காக தான் கொலையா?

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் (36) இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாண்டிசெல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்துவந்தார். இந்நிலையில் கடந்த  சில நாட்களுக்கு முன்பாக உறவினரினர் சுபநிகழ்வுக்கு பைக் மூலமாக சென்றுவிட்டு மானாமதுரை கட்டனூர் பிரிவில் வந்துகொண்டிருந்தபோது மற்றொரு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மலையரசனின் மனைவி பாண்டிசெல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தான் மலையரசனும் கொல்லப்பட்டு இருக்கிறார். இதனால் இது உண்மையிலேயே பணத்துக்கான கொலை தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு

கடலூர் மற்றும் சென்னையை தொடர்ந்து தற்போது மதுரையிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் தமிழக போலீசார் நடத்திய மூன்றாவது துப்பாக்கிச் சூடு இதுவாகும்.

கடந்த 20ம் தேதி  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற  கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஸ்டீபன் என்ற கொள்ளையனை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியானது.  அவர் மீது திருச்சி, நாகை, தஞ்சை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனைதொடர்ந்து, கடந்த 21ம் தேதி தூத்துக்குடியை சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா எனும் ரவுடி, சென்னை ஆதம்பாக்கத்தில் மறைந்து இருந்தபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் , அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Post

சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted by - June 18, 2023 0
சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி

Posted by - July 24, 2023 0
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம்…

விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

Posted by - July 6, 2023 0
மொடக்குறிச்சி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…
Generated Image November 13 2025 10 04AM

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

Posted by - December 2, 2025 0
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *