விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து ”உதயசூரியனை” ரசித்த பிரதமர் மோடி!

205 0

கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். நாளை பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். நாளை பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில இன்று காலை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை ரசித்த பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரியில் பிரதமர்: 50 நாட்களுக்கு மேலாக 200-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிரமான தேர்தல் பணியாற்றிய பிரதமர் மோடி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கன்னியாகுமரி வந்தடைந்தார்.

அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, பகவதி அம்மன் கோயிலுக்கு காரில் பிரதமர் சென்ற போது, சாலையோரம் காத்திருந்த மக்களும், சுற்றுலாப் பயணிகளும் உற்சாக முழக்கம் எழுப்பினர். வேட்டி அணிந்து சென்ற பிரதமர், பகவதி அம்மன் கோயிலில் 20 நிமிடங்கள் வழிபாடு நடத்தினார்.

சிறப்பு படகு: இதையடுத்து, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு குழாமில் இருந்து, ‘விவேகானந்தா’ என பெயரிடப்பட்ட பிரத்யேக படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்றார்.

வேட்டி சட்டை அணிந்து சென்ற பிரதமர், விவேகானந்தர் நினைவு மண்டத்தின் கீழ் தளத்தில், பகவதி அம்மனின் பாதம் பதிந்த இடம் என கருதப்படும் ஸ்ரீபாதத்தில் வழிபட்டார். பின்னர், மண்டபத்திற்குள் சென்று, ராமகிருஷ்ண பரமஹம்சரின் படத்திற்கும், விவேகானந்தரின் சிலைக்கும் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வெளிப்புறத்திலும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.

தியானம்:

இதையடுத்து, இரவில் அங்கு தங்கிய பிரதமர் மோடி, இன்று பிற்பகலில் விவேகானந்தர் சிலை உள்ள மகா மண்டபத்தில் தியானத்தை தொடங்கவுள்ளார். நள்ளிரவு வரை அங்கு தியானத்தை தொடரும் பிரதமர், சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, சனிக்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை தரைத் தளத்தில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரவு பகலாக தியானம் மேற்கொள்ளும் பிரதமர், அந்த நேரத்தில் இளநீரை மட்டுமே அருந்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளும் போது பாதுகாப்பு அதிகாரிகள் உடனிருப்பார்கள் எனவும், அவருக்கு 100 அடி தூரத்தில் பாதுகாவலர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் அலுவலகம் செயல்படும் வகையில் விவேகானந்தர் மண்டபத்தில், தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணைதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி, விவேகானந்தர் மண்டபம் முழுமையாக பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முப்படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவல்துறையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post

கேரளாவில் 5 ஆண்டுகளில் மாயமான 62 குழந்தைகள் எங்கே?

Posted by - November 29, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூரை சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா ரெஜினா (வயது 6). இவர் தனது 8 வயது அண்ணன்…

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

Posted by - September 25, 2025 0
லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…

மதுபோதையில் ஓட்டலில் இளம்பெண்களுடன் மாப்பிள்ளை நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

Posted by - April 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28).…

மற்ற இன்டர்நெட் சேவைகளை பின்னுக்கு தள்ளப்போகும் ஜியோ ஏர் ஃபைபர்… சிறப்பம்சங்கள் என்ன?

Posted by - August 28, 2023 0
எண்ணற்ற இன்டர்நெட் யூசர்கள் ஜியோ ஃபைருக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். #jio #india #reliance #mukeshambani #reliancejio #ambani #airtel #nitaambani #akashambani #ishaambani #anantambani…

நன்றி செலுத்தி நன்மை செய்யும் பெருநாள்!

Posted by - March 21, 2026 0
இறைவனுக்கு நன்றி செலுத்தும் மிக முக்கியப் பெருநாள் ஈதுல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) ஆகும். புனித ரமளான் மாதத்தை நோன்பு, குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல் உள்ளிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *