வெறும் வேர் போதுமே.. நாடி வருபவருக்கு நலனை மட்டுமே தரும் நன்னாரி.. கல்லீரலின் நண்பன் நன்னாரி வேர்கள்

293 0

சென்னை:

ஒரு கொடியின் வேர், இலை, பழம் என அனைத்துமே நன்மைகளை வாரி தருகிறது என்றால் அது நன்னாரிதான்.. தலைவலி முதல் பால்வினை நோய் வரை போக்கக்கூடிய சக்தி இந்த நன்னாரிக்கு உண்டு.

வெயில் காலத்தில் சர்பத் தயாரித்து இந்த நன்னாரியை சாப்பிடுவோம். ஆனால், இந்த நன்னாரியின் வேர்களை, நன்றாக அலசி சுத்தப்படுத்திவிட்டு, பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்தியோ மண்பானை நீரில் போட்டு சேர்த்து குடித்து வந்தால், உடலிலுள்ள உஷ்ணங்கள் எல்லாமே நீங்கிவிடும். அந்த அளவுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது இந்த வேர்கள்.வெறும் வேர் போதுமே.. நாடி வருபவருக்கு நலனை மட்டுமே தரும் நன்னாரி.. கல்லீரலின்  நண்பன் நன்னாரி வேர்கள் | Do you know Health Benefits of Nannari Root and Nannari  Ver is ...
இந்த வேர்களை இடித்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி வைத்து கொண்டாலே பல நோய்கள் பஞ்சாய் பறந்துவிடும்.. அல்லது நன்னாரி வேரை இடித்து, தண்ணீரில் ஊறவைத்து, இந்த தண்ணீருடன் சிறிது கருப்பட்டி சேர்த்து குடித்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்..

பற்கள் ஈறுகள்:

குழந்தைகளுக்கு இந்த பானத்தை குடிக்க தந்தால், செரிமானம் எளிதாக நடைபெற்று பசி அதிகரிக்கும்.. இந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால், பற்களும் ஈறுகளும் பலமடையும்.. கிருமிகள் நீங்குவதுடன், துர்நாற்றமும் பறந்தோடிவிடும். ஒற்றை தலைவலி, செரிமானம், பித்தம், போன்றவற்றை தணிக்க இந்த நன்னாரி வேர்கள் உபயோகமாகின்றன.

சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் இருந்தால், இந்த நன்னாரி நீரை குடிக்கலாம்.. சிறுநீர் நன்றாக பிரிந்துவிடும். அல்சர் புண்களை நெருங்க விடாமல் தடுக்கிறது.. கல்லீரலை பாதுகாக்கிறது.. முடக்குவாதத்தை அண்ட விடாமல் காக்கிறது.. சிறுநீரகத்தை சீராக இயங்க வைக்கிறது..

ஒற்றை தலைவலி:

ஒற்றை தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நன்னாரி நல்ல மருந்தாகும். நன்னாரி வேர்களை சூரணம் போல தயாரித்து, தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலையும் குணமாகும்.ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.. இதனால், சருமத்தில் வயதான சுருக்கங்களும் தள்ளிப்போடப்படுகின்றன.. சரும ஆரோக்கியம் செழிக்கிறது..

மூளை செல்களை விரைவாக அழிந்துவிடுவதில் இருந்து பாதுகாப்பதுடன், முதுமையில் வரக்கூடிய மறதி நோயான டிமென்சியா, அல்சைமர் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது இந்த வேர்கள் காக்கின்றன..

உதிரப்போக்கு:

பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால், வேரை சுத்தம் செய்து, அதை பாலில் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வந்தாலே அதிக உதிரப்போக்கு மட்டுப்படும். வெள்ளைப்படுதல் நோயும் மெல்ல மெல்ல குணமாகும்… இந்த வேர்களுடன், மல்லி விதைகளையும் சேர்த்து கொதிக்க வைத்து, பால், நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட்டால், பித்தம் தொடர்பான அத்தனை கோளாறுகளும் நீங்கிவிடும்.

Related Post

எல்லாம் பணத்திமிரு, அடுத்தவங்க கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா.. நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

Posted by - April 1, 2025 0
சமீப காலமாக அடுக்கடுக்காக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் யூடியூபர் இர்ஃபான். பாட்டியின் மீது கார் மோதியதில் தொடங்கி அவருக்கு குழந்தை பிறந்தது வரை எல்லாமே பஞ்சாயத்து தான்.ஆனால்…

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்

Posted by - January 1, 2023 0
நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.…

வதந்திகளை பரப்ப வேண்டாம் – வெளியானது நடிகர் அஜித்தின் ஹெல்த் அப்டேட்

Posted by - March 8, 2024 0
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல் நலம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.…

இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்” ஸ்டாலின் மடல்…

Posted by - February 25, 2025 0
தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டகளில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி

Posted by - December 8, 2023 0
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *