3ஆவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி – கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள்?

354 0

கேரள மாநில வரலாற்றில் பாஜக சார்பில் முதல் எம்பியாக தேர்வாகியுள்ள நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமராக மோடி 3ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து 72 பேர் பதவியேற்ற நிலையில், மாநில மற்றும் கூட்டணி வாரியாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் யார், யார் என விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு!

மோடி 3.0 அமைச்சரவையில் 21 மாநிலங்கள் மற்றும் டெல்லி, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிர்தேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவை பட்டியல் அமைந்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருந்து 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

பாஜக தவிர கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு 5 கேபினட் அமைச்சர், ஒருவருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர், 5 இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இருவருக்கும், பாஜக சார்பில் ஒருவருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதே போல, மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் உள்ள பிகார் மாநிலத்தில் இருந்தும் பலர் அமைச்சர்களாகியுள்ளனர்.

குறிப்பாக, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட கர்பூரி தாகூரின் மகன் ராம்நாத் தாக்கூருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநில வரலாற்றில் பாஜக சார்பில் முதல் எம்பியாக தேர்வாகியுள்ள நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்களான நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடத்தை தக்க வைத்தனர். மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும், எல்.முருகனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.இதே போல, பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த ரவ்னீத் சிங் பிட்டு-விற்கும் அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக தலைவராக உள்ள சுகந்தா மஜூம்தார் மற்றும் தெலங்கானாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பன்டி சஞ்சய் ஆகியோருக்கும் மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Post

Generated Image January 07 2026 5 00PM

வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க பழனிசாமி வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
‘வீட்டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​டுள்ள இடைநிலை ஆசிரியர் சங்க நிர்​வாகி​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும்’ என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட…
dfhgnhfzgdfsdas e1778561566460

இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!

Posted by - May 12, 2026 0
1977ம் ஆண்டிற்கு பிறகு திமுக அல்லது அதிமுக தான் ஆட்சியில் அமர்ந்து வந்தது. ஆனால் முதல்முறையாக இருகட்சிகளும் இல்லாத ஒரு கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு…

திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

Posted by - July 5, 2025 0
சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில…

அதிமுகவுக்கு நயினார்… ஓபிஎஸ் – தினகரனுக்கு அண்ணாமலை!

Posted by - December 11, 2025 0
அதிமுக தலைமைக்குப் பிடிக்காத தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிக நெருக்கமாக இருப்பதில் யாருக்கும் வியப்பில்லை. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத நபரான…

ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது – எடப்பாடி பழனிசாமி

Posted by - July 9, 2024 0
ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *