இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

47 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த டிச.26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தவாறு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து 28-வது நாளாக சென்னை எழும்பூர் மற்றும் பூங்கா நகர் ரயில் நிலையம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

கல்வியாளர்கள், பெற்றோர் வலியுறுத்தல்: இந்த போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கும் சூழலில், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன.

தற்போதைய சூழலில், பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தற்காலிக ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தாலும் மாணவர்களின் நலன் கருதி இந்த பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Post

ரஜினி, அஜித்துக்கு இன்று புகழாரம்.. அன்று வசைபாடு! சீமானை விளாசும் தவெக பாய்ஸ்..!

Posted by - September 16, 2025 0
சீமான் தனது கடந்த காலத்தில் ரஜினி, அஜித்தை விமர்சித்ததையும், விஜய்யை அரசியலுக்கு அழைத்த வீடியோவையும் தவெக தொண்டர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் களம் நாளுக்கு…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்

Posted by - December 8, 2025 0
அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகராட்சி…

‘ஆட்சியில் பங்கு கிடையாது’ – கறார் காட்டும் ஸ்டாலின்… கலக்கத்தில் காங்கிரஸ்!

Posted by - February 12, 2026 0
ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கும் சூழலில், ‘கூட்டணி ஆட்சியெல்லாம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது’ என தடாலடியாக மறுத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *