TN Cabinet Asdhav Arjuna: விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க முயன்றதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
”அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு”
தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். அதில் சமுக நீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகளும் இடம்பெற வேண்டும் என்பதே முதலமைச்சர் மட்டுமின்றி தவெகவினரின் விருப்பமாகவும் உள்ளது. கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இதுபோக வெளியில் ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளின் முடிவை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். அதேநேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அமைச்சரவைய்ல் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். முதலமைச்சரின் விருப்பமும் அதுதான். இஸ்லாமிய சகோதரர்களான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தரப்பினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.